30/09/2021

என்னை நேசித்தவர்கள் விட்ட சாபமா...

 



என்னை நேசித்த அன்பை
அன்று உதாசீனப்படுத்தினேன்...

நான் தேடி சென்ற அன்பு இன்று
என்னை அனாதையாக்கியது...

மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையை...

நான் மறந்துவிட்டேன்...

உன்னை நான் மறந்துவிட்டேன்
என்று சொல்லும் போதெல்லாம்...

வழக்கத்தைவிட அதிகமாக
உன்னை நினைக்கிறேனடி...

என் உறவு உனக்கு
கனவாக இருக்கலாம்...

உன் உறவு எனக்கு கனவாக
இல்லாமல் போய் விட்டதடி...

உன்னை
மறந்துவாழ முயல்கிறேன்...

இன்றுவரை முயற்சிகள்
மட்டுமே என் வாழ்வில்...

என்னை நேசித்த 13 இதயம் 
விட்ட சாபமா என்று தெரியவில்லை... 

நான் நேசித்தவள் 
என்னை அனாதையாக்கினாள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.