25/09/2021

NIOS - தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம்...


பள்ளிக்கு போகாமலே வீட்ல இருந்தே பள்ளி படிப்ப படிச்சு சான்றிதழ் வாங்கலாம்..

சரியா 13 வயது வரும்வரை உங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து அவர்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வைத்தாலே போதும்..

அதன் பின்னர்  இதன் இணைதளத்திலோ அல்லது நேரடியாகவோ சென்று எட்டாம் வகுப்பு நுழைவுத்தேர்வு எழுதி அதன் பின்னரும் கூட வீட்டில் இருந்தே படிக்கலாம்..

வருடத்தில் இரண்டு முறை தேர்வு நடைபெறும் அதில் நமக்கு விருப்பம் உள்ள தேர்வு மாதத்தில் தேர்வு எழுதலாம்..

இவர்கள் தரும் சான்றிதழை கொண்டு மேற்படிப்பு படிக்கலாம் மேற்படிப்புனா சும்மா இல்லை மருத்துவ படிப்பும் படிக்கலாம்..

நீட், ஐஐடி போன்ற நுழைவுத்தேர்வு எழுத இச்சான்றிதழ் தகுதியானது..

ஏனெனில் இந்த கல்வி நிறுவனத்தை நடத்துவது மத்திய அரசு..

என்னேரமும் புத்தகங்களுக்குள்ளேயே முழ்கி திளைக்கும் மாணவர்களை விட இம்முறையில் பயில்பவர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என இந்நிறுவனத்தை ஆராய்ந்து தரவுகள் தந்துள்ளனர்..

தமிழகத்தில் சென்னை, மதுரை, ஓசூர் ஆகிய மூன்று இடங்களில் இதற்கான அலுவலகம் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.