27/04/2017

மூன்றாம் உலகப் போரை திட்டமிட்டுள்ள இஸ்ரேல்...


உலகத்தை தனது தனிக்கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் எப்போதோ திட்டமிட்டு விட்டது. அதன் ஆரம்பம்தான் 3ஆவது உலக போர்.

ஒரு சின்ன குட்டி நாடு. மொத்தம் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட நாடு இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இன்று உலகத்தையே அவர்கள்தான் மறைமுகமாக ஆள்கின்றார்கள் என்பது நம்மில் பலருக்கு புரியாமல் உள்ளது. காரணம் அவர்களின் ஒற்றுமை.

உலகில் எங்குமே இல்லாத ஒற்றுமை இஸ்ரவேல்காரர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் இஸ்லாம் என்றால் ஒற்றுமையாம் என்று சொல்லில் மட்டுமே உள்ளது. இஸ்லாம் வெறுக்கும் பதவி மோகம், பணம் மோகம், குத்து வெட்டு, பொறாமை அத்தனையும் இஸ்லாமிய மக்களிடமும் இஸ்லாமிய நாடுகளிடமும் மிக நிறைந்து காணப்படுகின்றன.

இந்த நிலைமையை இஸ்ரவேல் நன்கு பயன்படுத்தி இஸ்ரேல் தனது பலத்தை நிலைநிறுத்தி விட்டது. முஸ்லிம் நாடுகளின் ஒன்றுமை இன்மையால் இன்று ஈராக் அழிந்து விட்டது, சிரியா அழிந்து கொண்டிருக்கின்றது.

லெபனான் முடிந்த கதை. இப்போது பலமுள்ள நாடு ஈரான், துருக்கி மட்டுமே. யுத்தம் ஒன்று வருமானால் ஈரான் தாக்குப் பிடிக்குமா?

உலகை இஸ்ரேல் தனது பிடிக்குள் கொண்டு வரும் திட்டங்களை 30 ஆண்டுகளுக்கு முன்னர் நன்கு திட்டமிட்டு அதை 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வருகின்றார்களாம்.

இது நம்ப முடியாத ஒன்றாக தோன்றினாலும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உலகில் அன்றாடம் கிடைக்கப் பெற்றுக்கொண்டு வருகின்ற காரணத்தால் நம்ப வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகின்றன.

இஸ்ரேலின் திட்டம் என்பது அகன்ற பெரிய இஸ்ரேல் இங்கு படத்தில் காட்டியுள்ள நாடுகளை சேர்த்து இந்த அகன்ற பெரிய இஸ்ரவேல் தேசத்தை அமைக்க இஸ்ரவேல் தீட்டியுள்ள 3ஆம் உலக மகா யுத்தம் ஒன்றை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன.

அதன் முதல் கட்டம்தான் சிரியா சீரழிவு. அதாவது அரபு தேசங்களில் பலமிக்க நாடுகளை ஒவ்வொன்றாக சீரழிப்பது சின்னபின்னமாக்குவது.

தெளிவாக சொன்னால் புது உலகக் கோட்பாடு ஒன்று மறைமுகமாக தயார் செய்யப்பட்டு கொண்டு வருகின்றன. இது தொடர்பில் புதுப்புது தகவல்களை மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அவைகளில் இருந்துதான் இந்த இரண்டு படங்களும் எமது இந்த கட்டுரைக்கு கிடைத்துள்ளது. மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து கிடைத்துள்ள தகல்களை கொண்டு 3ஆம் உலக மகா யுத்தம் பற்றி பார்ப்போம்.


இலுமினாட்டிகள்...

இலுமினாட்டி என்ற இச்சொல் நமக்கு அத்தனை பெரிதாக அறியப்படாத ஓர் விடயமாகத் தான் காணப்படுகின்றது.
காரணம் இதனைப்பற்றி தகவல் வெளியிடுபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற கருத்தை மேலைத்தேய ஊடகங்கள் நம்புகின்றன. ஆனாலும் சர்வதேச மட்டத்தில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் இந்த விடயம் ஓர் மறைக்கப்பட்டு கொண்டு வரும் மர்மமாக இருந்து வருகின்றது.

மேலைத்தேய செய்திகளின் அடிப்படையில் உலகில் 13 குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களால் உலகின் புதிய கட்டளை எனும் பெயரில் இரகசியமாக சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் ஒரு மூளையில் நடைபெறும் அரசியல் விடயமாக இருக்கட்டும், போராக இருக்கட்டும், பொருளாதாரமாக இருக்கட்டும் ஏன் காலநிலையும் உட்பட அனைத்தும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

ஆம் இஸ்ரேல் நாட்டின் இலுமினாட்டிகள் தான் இன்று உலகை ஆட்டிப்படைத்து வருகின்றனர். இது கொஞ்சம் அல்ல கொஞ்சம் கூட நம்ப முடியாத விடயம் என நினைக்கக் கூடும். தொடர்ச்சியாக இதனைப் பற்றி தெளிவாக பார்க்கும் போது பல உண்மைகள் வெளிப்படும்.

உலகின் புதிய கட்டளை இதன் நோக்கம் யாதெனின் உலக மக்கள் அனைவருமே இவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதே.

அதே சமயம் இவர்களுக்கு எதிராக சிந்திப்பவர்களும், எதிர்ப்பவர்களும் உலகிற்கு தகுதியற்றவர்கள் என கணிக்கப்படுவார்கள்.

அத்தோடு அவர்களை உலகத்தில் இருந்து அகற்றும் செயல்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் நம்ப முடியாத உண்மைதான்.

உலகம் முழுவதும் நிழல் மனிதர்களையும் மர்மநபர்களையும் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு தங்களிடையே இரகசியமாக தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனவாம். அதற்காக இரகசியமான குறியீட்டு பரிமாற்றங்களை செய்து வருகின்றனவாம். அவற்றில் மிகவும் முக்கியமானது ஒற்றைக்கண் குறியீடு.
இஸ்ரவேல் தயாரிப்புகளில் பல வடிவங்களில் இந்த ஒன்றைக்கண் மார்க் இருக்குமாம்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம்
2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கியது பின்லாடன் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அந்த தாக்குதலை செய்தது இஸ்ரேல் மொசாத் என்பது பின்னர் உலகுக்கு தெரிய வந்தது.

இந்த தாக்குதல் திட்டம் என்பது கூட 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலுமினாட்டிகளால் திட்டமிடப்பட்ட செயலாகவே ஆய்வளர்களால் ஆதாரபூர்வமாக சொல்லபப்டுகின்றது.
தற்போது பின்லாடன் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ யின் பாதுக்காப்பில் இருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் சீ.ஐ.ஏ உளவாளி எட்வர்ட் இஸ்நோடன் கடந்த வருடம் பகிரங்கமாக சொல்லியுள்ளார்.
சீ.ஐ.ஏ அமைப்பை விட்டு விலகி இஸ்நோடன் தற்போது இவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அமெரிக்காவினால் தேடப்படுபவர் இவர்.

ஆனாலும் அமெரிக்க தாக்குதலுக்கு உண்மையான சூத்திரதாரிகளாக இஸ்ரேலின் இலுமினாட்டிகள் குழு இருப்பதாவே இந்தக் குழு தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாக அந்த ஆர்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 2001ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதலை 1983ஆம் ஆண்டே திட்டமிட்டர்களாம்.

அதே போன்றுதான் 3ஆம் உலகப் போரையும் 1990 ஆம் ஆண்டுவாக்கில் இந்த இலுமினாட்டிகள் குழு திட்டமிட்டுள்ளதாக அறிய வருகின்றன.
உலகப் போரை எதிர்கொள்ள அமேரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தயார் நிலையில்தான் உள்ளார்கள். அதிலும் விசேடமாக அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் அண்மைக்காலமாக இதுவரையும் உலகம் காணாத அதி நவீனரக ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.
சத்தம் இல்லாமல் இருட்டில் பதுங்கி மனிதனை துல்லியமாக அறியக்கூடிய அதி நவீனரக ஆயுதங்கள் அவை.
ஆயுதக் கொள்வனவும் தயாரிப்பும்
உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன. குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளன.

மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.
பிரித்தானிய, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அண்மைகாலங்களாக இஸ்லாமிய பயங்கரவாத்தை அடிக்கடி சந்தித்து வருகின்றன.

மேற்கு நாடுகள் தவிர்ந்து கடந்த காலங்களில், சீனா, ரஸ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதிலும், கொள்வனவு செய்வதிலும் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் இந்த ஆயுத உருவாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் கதிகலங்கி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், மின் காந்த அலை ஆயுதம்(எலக்ரோ மெக்னடிக்) ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுதம் குண்டுகளை வெளியிடுவதில்லை. மாறாக மின் காந்த அலைகளை குண்டுகளை போல வெளியிடக்கூடியது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செயற்பட கூடிய இந்த ஆயுதம் சுமார் 100 மைல் வரை சென்று தாக்குதல் மேற்கொள்ளக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆயுதத்தின் மூலம் இரும்பை கூட துளைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேரலையாக சென்று தாக்க கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மின் காந்த அலைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் காற்றோ அல்லது ஏனைய மூலக் கூறுகளோ தடுக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனா - வடகொரியா - வடகொரியா அமெரிக்கா - அமெரிக்கா - ரஷ்யா மோதலுக்கு தயார்..

சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே போர்ச் சூழல் வலுப்பெற்று கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தினை நிறுத்தும் அளவு சர்ச்சை வளர்ந்து விட்டது. இஸ்ரேல் இந்தப் போரை திட்டமிட்டாலும் அமெரிக்காவின் துணையுடன் தான் நடத்தவிருக்கின்றன.

இடையே அமெரிக்கா வட கொரியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்கின்றது. வட கொரியாவும் அணு மூலம் திருப்பித் தாக்குவோம் என்று பதிலடி கொடுத்து வருகின்றது.
ஒருவேளை அமெரிக்கா வட கொரியாவிற்கு இடையே போர் மூண்டால் சீனா என்ன செய்யும் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது.
காரணம் சீனாவின் எதிர்பார்ப்பு அமெரிக்காவின் இடம் தன் வசமாக வேண்டும் என்பதே. மற்றொரு பக்கம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

கடந்த மாதமாக ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களது படைகளையும் ராணுவ தளபாடங்களையும் நகர்த்தி வைத்துள்ளது. எந்த நிமிடமும் இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளது. சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதலின் விளைவு ரஷ்யா அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவும் தயாராகி விட்டது.

அதனால் ஒருவருக்கொருவர் தாக்கக்கூடாது என்ற 'ஹாட்லைன்' உறுதியும் இப்போது இல்லாமல் போய்விட்டது. மற்றொரு பக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை காரணம் காட்டி அமெரிக்கா தன் போர் விளையாட்டை கண் மூடித்தனமாக ஆரம்பித்து விட்டது.

இந்த போர்ச் சூழலுக்கு பதில் மத்திய கிழக்கு கூடிய விரைவில் பற்றி எரியும். அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற காத்திருக்கும் சீனா, ரஷ்யா, வட கொரியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கு ஆதரவாக இஸ்ரேல் தனது முழுப்பலத்தையும் கொடுக்க காத்திருக்கின்றன. இப்படியாக ஒரு நீண்ட போர் ஒன்றுக்கு தேவையான சக்தி வாய்ந்த ஆயுதங்களும். அணு ஆயுதங்களும் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் நோக்கம் மூன்றாம் உலக யுத்தம் ஒன்றுக்கான மிக அதிக வாய்ப்புள்ளது என்றே கூறலாம். ஆனாலும் இந்தப் போர்ச் சூழலை உலக அமைதி அமைப்புகள் ஒன்றும் கண்டிக்கவில்லை.
காரணம் உலகில் உள்ள அத்தனை அமைப்புகளிலும் இஸ்ரவேலின் இல்லுமினேட்டிகள் குழு இருப்பதாவே இந்தக்குழு தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போது எந்த நிமிடத்திலும் யுத்தம் ஆரம்பமாகும் நிலையில் நாம் உள்ளோம். சுமார் 5 - 10 கோடி மக்கள் இந்த யுத்தத்தில் காவு கொள்ளப்படலாம் என்ற நிலையுள்ளது.

யுத்தத்தில் ஈடுபடும் நாடுகள் அத்தனையும் அணு ஆயுதங்களையே பயன்படுத்தும் நிலையில்தான் உள்ளன. உலக போர் சூடு பிடித்துள்ள நிலையில் அமெரிக்காவின் வான்பரப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்த ரஷ்யாவின் இரண்டு உளவு விமானங்களை இடைமறித்து, அமெரிக்கப் படை திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் அணு ஆயுதம் மூலம் அவுஸ்திரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என கிலி கொள்ள வைக்கின்றன.
இன்னொரு புறம் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

வடகொரியா அமெரிக்காவை அணு ஆயுத்தால் தாக்குவோம் என்று மிரட்டி வருகின்றது. ஆக ஒரு அணு ஆயுதப் போருக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.
3 ஆம் உலக போர் இல்லை என்று எல்லோரும் சொன்னாலும் உலகம் என்றுமே கண்டிராத ஒரு அணு குண்டு தாக்குதல்களை சந்திக்கவுள்ளோம்.

முஸ்லிகளின் எதிர்வருகின்ற ரமலான் மாதத்தில் இந்த தாக்குதல் ஆரம்பமாக அதிக வாய்ப்புள்ளது பழைய ஆட்கள்தான் எப்போதும் பழைய யுத்தம் பற்றி சொல்லுவார்கள். நாளை நாமும் இந்த புதிய யுத்தம் பற்றி பேசலாம். பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.