09/05/2017

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட சோதனைக்கு மத்திய பாஜக மோடி அரசு அனுமதி...


தமிழ்நாட்டில் தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

4 மாவட்டங்களுக்கு அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகள், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிணறு என மொத்தம் 21 கிணறுகள் சோதனைக்காக தோண்டப்பட உள்ளன.

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தவில்லை என்று எண்ணெய் நிறுவனத்துக்கு, தமிழக அரசு பிரமாண பத்திரம் வழங்கியதாக தெரிகிறது.

இந்த பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டித் தான் மத்திய அரசிடம், எண்ணெய் நிறுவனத்தினர் ‘ஹைட்ரோ கார்பன்’ சோதனைக்கான அனுமதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம் இல்லை என்று மாநில அரசை நிர்பந்தித்து  பிராமண பாத்திரம் வாங்கியதாக எதிர் கட்சியினர் குற்றம் சாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் உறுதி என்பதே இதில் இருந்து தெரிகிறது  என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.