09/05/2017

திருவண்ணாமலை அருகே கடன் பிரச்சனையால் விஷம் குடித்த விவசாயி மரணம்...


திருவண்ணாமலை அருகே கடன் வாங்கி கண்ணாயிரம் என்ற விவசாயி கரும்பு பயிரிட்டுள்ளார், கரும்பு கருகியதால் கடனை திருப்ப செலுத்த முடியவில்லை, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வீட்டை எழுதி கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த கண்ணாயிரம் கடந்த வாரம் விஷம் குடித்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கண்ணாயிரம் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இதையும் அரசு, கணணாயிரம் வயிற்று வலியால் விஷம் குடித்தார் எனச் சொல்லப் போகின்றதா என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.