09/05/2017

நாடு அழிஞ்சே போகும்டா...


இருக்கும் ஒரு சில நல்ல மனிதர்களில் மருத்துவர் புகழேந்தியும் ஒருவர். ஐந்து ரூபாய் பத்து ரூபாய் இருந்தால் போதும் என்று மக்கள் நம்பி போய் வரிசையில் நிற்பார்கள்.

பெரிய பயமுறுத்தல் ஏதுமின்றி அந்த நோயாளி குணமடைவார். மருத்துவம் வியாபாரமல்ல. சேவை என்று வாழ்ந்து வருபவர்.

நோயாளிகளுக்கும் மக்களுக்கும் மருந்து கம்பெனிகளின் மோசடியை விளக்கி அனுப்புவார்.

கல்பாக்கம் சுற்றுவட்டாரா பகுதியில் பத்து ரூபாய் டாக்டர் என்று பெயரெடுத்தவர். இவருக்கே இந்த கதி.


வாடகை வீட்டுக்காரன் சட்டத்திற்கு புறம்பாக இவரது கிளினிக்கை இடித்து நொறுக்கி.. இதன் பின்னால் பெரிய மோசடி கும்பல் இருக்கிறது என்பது மட்டும் உறுதி. தடுப்பூசி ‘மர்மத்தை’ உடைத்து அதற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.

இப்படியான மனிதர்களையும் முடக்கிவிட நினைத்தால் நாடு அழிஞ்சே போகும்டா...

http://www.vikatan.com/news/tamilnadu/88753-this-is-what-happens-when-you-stand-against-government---doctor-pugazhendhi-s-clinic-destroyed.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.