10/05/2017

பாஜக மோடியும் பயங்கரவாத சதியும்...


டாஸ்மாக் லாரியில் திருவாரூருக்கு கொண்டு வரப்பட்ட வெடி குண்டுகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு உள்ளன. லாரி ஓட்டுநர், பா.ஜ.கவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவருக்காக வெடி குண்டுகளை கொண்டு வந்ததாக கூறி உள்ளார்...

வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்ட செய்தி எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. கருப்பு முருகானந்தம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே சுவாதியை படுகொலை செய்து இந்து / இஸ்லாம் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு செயல்பட்ட பா.ஜ.க குண்டர் படை தளபதி கருப்பு முருகானந்தம் இன்று தமிழ்நாட்டுக்குள் வெடி குண்டுகளை கொண்டுவர என்ன காரணங்கள்?


தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதோடு.... தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எடப்பாடி மைனாரிட்டி அரசு ஒப்புதலோடு செயல்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில்.... கருப்பு முருகானந்தம் வெடி குண்டுகளோடும் குண்டர் படைகளோடும் தயாராகிறார் என்றால் அதற்கு ஒரே ஓரு காரணம்தான் இருக்க முடியும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் சக்தி பொங்கி எழுந்தால் அங்கு வெடி குண்டுகளை வீசி கலவரங்களை ஏற்படுத்தி தமிழ்நலன் இயக்கங்கள் மீது அப்பழியை சுமத்தி தமிழர்களை தொடர்ந்து போராடாமல் வைத்திருக்க மோடி / எடப்பாடி அரச பயங்கரவாத கூட்டணிகளின் சதி வேலைகளாகத் தான் நாம் இதை அவதானிக்க வேண்டும்...

பிற்சேர்க்கை: பத்திரிகைகளில் மேலோட்டமான செய்தி வந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=299274


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.