05/07/2017

கரும்புலிகள் தினம்...


இவர்கள் தான் நமது காவல் கருப்புகள்...

தலைவர் பிரபாகரன் அவர்கள் கொற்றவைக்கு கிடா பலிகொடுத்து செயல்கள் செய்பவர் என்பது தற்போது எனக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்...

ஆணையிரவு போர் அதற்கு சாட்சி... தலைவர் பிரபாகரனுக்கு உறுதியாக அந்த ஆளும் அரசகுடும்பத்தை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். ஏனெனில் அவரது பேச்சுகளும் நடவடிக்கைகளும் அதை காட்டிகொடுக்கிறது மேலும் நார்வேயின் தலையீடும் அதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால் தலைவருக்கு தெரியாத தமிழ்இன வரலாறு எல்லாம் ஏதோ தங்களுக்கு மட்டுமே தெரிந்ததை போல பெருமைகளை பேசி பேசி இந்த இனத்தை சிலர் மலுங்கடிக்க முயலுகிறார்கள். மக்களும் அந்த பெருமைகளை தனது தனிச்சாதி பெருமையாக எடுத்துகொள்ள முயலுகிறார்கள்.

தலைவர் பிரபாகரன் எந்த ஒரு பெருமைகளையும் சொல்லி பெரும்படையை கட்டவில்லை.. மாறாக நாம் சுமந்து வந்த காயங்களையும் வரலாறுகளையும் தான் சொல்லி சொல்லி பெரும் தமிழர் இராணுவத்தை உருவாக்கினார்.. அதை ஏனோ இப்போதுள்ள ஒருசிலர் மறந்து விடுகிறார்கள்.

நீங்கள் அடுத்தவன் பெருமையை தனது என்று சொல்லுவதால் எந்த மாற்றமும் இந்த மண்ணில் நிகழப்போவது இல்லை.

ஆனால் வலியையும் காயத்தையும் சொன்னால் ஒவ்வொருவனுக்கும் வென்றாக வேண்டும் என்ற வெறிவரும்.


கரும்புலிகள் நம் உடன் இருப்பார்கள். இவர்கள் நமக்காக சிந்திய இரத்தம் வீண் போகாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.