22/08/2017

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - திமுக ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை...


தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பெருபான்மையை உடனடியாக நியமிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டும்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து ஆளுகின்ற அரசை கலைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். எனவே ஆளுநர் வித்தியாசாகர ராவ் உடனடியாக சட்டப்பேரவை கூட்டுவதற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், ஊழல் அணிகளை ஆட்சியில் அமர பிரதமர் மோடி துணை புரிந்துள்ளார். இவர் எப்படி நாட்டின் ஊழலை ஒழிக்க முயற்சி செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.