27/08/2017

சுப்ரீம் கோர்ட்டே சொன்னாலும் கேட்க மாட்டோம் : ஆதார் கேட்டு அடம்பிடிக்கும் வருமான வரித்துறை...


சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்பும் ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என்று, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வருமான வரித்துறை வரும் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.

முன்னதாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டது.

இதனால் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கப்படும் நடைமுறையில் பல மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் கோர்ட்டின் இத்தகைய தீர்ப்பால் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

இருப்பினும் வருமான வரித்துறை தனது தீர்மானத்தில் உறுதியாக உள்ளது.

ஆதாரை பானுடன் இணைக்காவிட்டால் பான் எண் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.