06/08/2017

திராவிட அரசியல் , நமது தமிழ் சாதிகளை மற்ற தமிழ் சாதிகளுடனே பூசல்களை உருவாக்கி மோதல் ஏற்பட வழிவகை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது...


தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும் படி செய்துவிட்டனர்..

களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல . தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் நமது போராட்டம் அமைய வேண்டும்.

நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாக கருதாமல் , வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம் . அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம்..

ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திர்க்கேதிரான கருத்துகளை உள்வாங்கி, அதனால் நாம் இழந்ததை பற்றியும், இனி என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்..

லச்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல், தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் கூட்டணி வைக்கும் அனைத்துக் கட்சிகளையும் புறக்கணிப்போம்...

நமக்குள் இருக்கும் அக முரண்களை களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம், இருப்பதை காப்போம்.. இழந்ததை மீட்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.