06/08/2017

தமிழர் கெட்டது யாரால்?


தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்.

தான் யாரென்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்.

அதனால்தான் தமிழினத் தலைவர் என்று சொல்லிகொள்வோறேல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்.

தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன்தான் என்று நினைத்து வாழ்கின்றனர், அதனால்தான் வந்தேறி கூட்டதாரெல்லாம் ஏமாற்றி வாழ்கின்றனர்.

இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும். அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்.

தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர். சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது மூத்திரம் பெய்து விட்டு தான் செல்லும்.

ஈழத் தமிழர்களின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் களப் போராளிகள். ஆனால் இங்கு நிலைவேறு.

தமிழனே தமிழனை பார்த்து தீவிரவாதி, பிரிவினைவாதி, பார்பன அடிவருடி, வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிகொண்டு தமிழகத்தை துண்டாட பார்கின்றனர் என்று தவறான அடையாளமிட்டு அழித்துவிட நினைகின்றனர்.

தமிழர் அல்லதார்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு கிடக்கிறான், அதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?

ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவது காலத்தின் கட்டாயம் அது நடக்கும்.. தமிழக தமிழர்கள் விடுதலை பெரும் நாள் எப்போது?

திராவிட ஆரிய மாயைகளில் சிக்கி சீரழிந்து போன தமிழன் எப்படி மீளபோகிறான்?
எப்போது நாட்டை ஆளபோகிறான்?

யாரும் இங்கே புதிதாக தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்க வில்லை.. மூத்த தமிழ் அறிஞர்கள் செய்த அரும்பணிகளை மறந்து போனதால் நினைவூட்டுகிறோம்..

பன்னாட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமயகிபோன தமிழன் தமிழ் தேசியத்தை அறிய தவறிவிட்டான்.

தாய் மொழி வழி கல்வியை மறந்து விட்டதால் இப்படி தாழ்வான நிலைக்கும் , சொந்த மண்ணில் வேலை வாய்ப்பிற்கும் ஏங்கி தவிக்கிறான் .

ஈழத் தமிழர்களுக்காக இப்போது குரல் உயர்த்தி பேசும் தமிழக தமிழர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ பேசியதுண்டா?

அதைப்பற்றி நமக்கு என்ன கவலை. நாம் தான் சுயநல பதர்களாகிவிட்டோம். சாதியால் பிரிந்து கிடக்கின்றோம்.

கல்வி வேலைவாய்பு, பொருளாதாரம், கலை, நாகரிகம், பண்பாடு, இனஉணர்வு என எல்லாவற்றிலும் பிளவுபட்டு கிடக்கின்றோம். இந்த பிளவு நிலைத்திருக்க வேண்டும் என்பதில் திராவிடம் பேசுபவர்கள் ஒரே அணியாக செயல்படுகின்றனர்.

பல நூற்றாண்டு காலமாக இந்த மண்ணையும் மக்களின் உழைப்பையும் சுரண்டி பிழைக்கும் தெலுங்கர், மலையாளி, கன்னட மார்வாடி வடவர்களை நாம் ஏன் புறகணிக்க கூடாது ?

உண்மை கசக்கத்தான் செய்யும். முரண்பாடுகளை களைய வேண்டும் இன பற்று தான் நம்மை வாழ வைக்கும், ஆளவைக்கும்..

தமிழ் பேசுகிறவன் எல்லாம்
தமிழன் அல்ல..

யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைகபட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்.

உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்?

பிராமணியத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு திராவிடத்தை திணித்துவிட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே..

தமிழன் இல்லாத மதத்தில் கரைந்து போனதற்கு அவர்கள்தான் காரணம்.

சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது. விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது.
கலையும் பண்பாடும் சீர்குலைந்தது.

ஆரிய வைசிய மகாசன சங்கம்,
நாய்டு மகாசன சங்கம்,
தெலுங்கு மகாசன சங்கம்,
கேரளா மகாசன சபை,
சௌராஷ்டிர அமைப்புகள், போன்றவை தமிழகத்தில் முளைத்துவிட்டன.

ஆட்சி அதிகாரங்களை கைபற்றிகொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கும் திராவிடக் கட்டசியை தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்திய தேசியம் தான்.  அதை காட்டியே தமிழனை விலங்காண்டி நிலைக்கு கொண்டு சென்று விட்டனர்.

தமிழ் நாட்டில் உள்ள சுயமரியாதை இயக்கம் ஏன் மற்ற மாநிலங்களில் கால் கொள்ள வில்லை, அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்..

நாம் தமிழர்கள் நம் நாடு தமிழர்நாடு
திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்.

இன பற்றுகொள்ளதவரை எழ முடியாது ..
எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..
சினம் கொள்ளமறுத்தால்
நீயும் ஒரு பிணம்..

சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

தமிழர் நாடு தமிழர்களுக்கே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.