19/08/2017

எல்லோரும் நினைப்பது போல் சுங்கச்சாவடி என்பது ஏதோ பணத்திற்காக மட்டும் அமைக்கப்படவில்லை...


ஒரு நாள் கிராம மக்களை முழுக்க நகரத்தில் அடைத்துவிட்டு 90% நிலங்களை தன்னுடைய கூலிப்படை அரசுகள் மூலம் கைப்பற்றி அதில் விவசாயம் செய்யபோகிறது தனிபெரும் நிறுவனங்கள். நகரத்தில் இடம் பற்றுமா என கேள்வி எழும்பலாம்?

சென்னையில் தனிவீடுகளில் யாரும் குடியிருக்க கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் வசிக்க வேண்டும் என்று அரசாங்கம் ஒரு உத்தரவு போட்டாலே போதும்.சென்னை இடபற்றாக்குறை இல்லாமல் நிம்மதியாக மூச்சுவிடும். ஆனால் மனிதர்களின் வாழ்க்கை நரகமாகிவிடும்...

எல்லோரையும் கொண்டு வந்து அடைக்கும் ஒரு ஆட்டுபட்டியை போல தான் நகரங்கள் இருக்கும். அதை விட்டு ஒருவன் வெளியே போனால் கண்காணிக்க தான் சுங்கசாவடிகள். உள்ளே வசதிகள் என்ற பெயரில் பொழுதுபோக்குகள் சில ஏற்படுத்தப்படும். அதற்காக தான் இப்போது மக்கள் தயார்ப்படுத்தப் படுகிறார்கள்.

இப்படி உலகமக்களை முழுவதும் நகரத்தில் அலன் கட்டுபாட்டில் அடைத்து வைத்துவிட்டாலே 90% வெற்றி தான் அவனுக்கு.

6,000 வருடங்களுக்கு முன்பே மன்னர் குடும்பத்தால் சங்கம் என்ற அவையில் வைத்து உருவாக்கப்பட்டு இப்போது வரை மறைமுகமாக செயல்படுத்தி கொண்டு இருக்கும்.

உலகாயதம் என்ற தத்துவத்தின் வெற்றியே நகரத்தை நோக்கி நம்மை நகர்த்துவதில் தான் இருக்கிறது...

இதற்கு தீர்வு பல செயல்கள்இருக்கிறது அதில் ஒன்று..

ஒவ்வொருவரும் தனக்கு 10 ஏக்கர் இடம் என முடிவுசெய்து கொண்டு உழைக்க வேண்டும். இதே போல 10 பேர் இணைந்து ஒரே சுற்றில் 10*10 100 ஏக்கர் இடத்தை வாங்கி அங்கே அந்த 10 குடும்பங்களும் குடியேற வேண்டும். தங்களுக்கு தேவையானதை அந்த 100 ஏக்கருக்குள்ளேயே நிறைவேற்றி கொள்ள வேண்டும். தற்சார்பு என்பது இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும். உள்ளே இணைய விரும்பும் புது புது குடும்பங்களை மகிழ்ச்சியாக வரவேற்று உள்ளே ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்... அந்த 100 ஏக்கரும் காடாக வளர்ந்து நிற்கும்...

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் தம்முடைய நிலத்தில் நமக்கு தான் பலம் அதிகம்... நீங்கள் ஒரு கூட்டு சமூகமாக வாழ விரும்பினாலே இயற்கை அதற்கான ஆற்றலை மேலே இருந்து இறக்கும்... எதிரியை கண்டு நாம் அஞ்சி நடுங்கி இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என மனதை நம்பவைத்து நம்மை உளவியலாக முடக்கி போடும் வேலையை தான் இந்த இலுமினாட்டி பேச்சாளர் செய்து கொண்டிருக்கிறார்கள் இதை புரிந்து கொள்ளுங்கள்...

எதிர்த்து நில்லுங்கள்... ஒரு நாள் நாம் ஒரே சமூகமாக இணைவோம்...

இனிமையான வாழ்க்கையை இயற்கை உங்களுக்கு அருள வாழ்த்துகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.