09/09/2017

இப்படி தான் நாங்கள் சொல்லும் நினைவலை (குலதெய்வ) வேலை செய்யும்...


இடம்: நுங்கம்பாக்கம்
நாள்: 09/09/2017

நிருபர்: அம்மா சொல்லுங்க நீங்க எந்த கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்துறீங்க?

மாணவி: இங்க பாருங்க அண்ணா நாங்க அமைதியான முறையில் நீட்டுக்கு எதிராகவும் அனிதா சாவுக்கு நீதி கேட்டும் போராட்டம் பண்ணோம் ஆனா இந்த போலீஸும் எங்களை அடிச்சு இழுத்துட்டு போறாங்க அங்க பாருங்க அண்ணா கை கட்டி வேடிக்கை பாத்துட்டு இருக்கு அதான் எங்க எச்எம் அதெல்லாம் ஒரு டீச்சரா ணா சப்போர்ட் பண்ணலணாலும் பாதுகாக்கலாம்லண்ணா அவங்களே அடிக்க சொல்றாங்கணா நாங்க என்ன நாய்களா? முடிய புடிச்சு இழுக்குறாங்க கன்னத்துல அறையுறாங்க எங்க உரிமைய கேட்டா அடிப்பாங்களா? சம்பளம் பத்தலணா மட்டும் போராடுவாங்க இதுக்கு வர மாட்டாங்களா?இந்த போலீஸுக்கு எல்லாம் நீட் தேர்வை வச்சிருந்தா இவங்க போலீஸ் ஆயிருப்பாங்களாண்ணா? அவங்களுக்கு எல்லாம் குழந்தைகள் இல்லையா அவங்களுக்கும் சேர்த்துதானே நாங்கள் போராடுறோம், டீச்சரே மெரட்டுறாங்க டீசி குடுத்துருவோனு என்ன பண்ணாலும் நாங்க போராட்டத்தை தொடருவோம். திங்கட்கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.

நிருபர்: நன்றிம்மா உங்க பேரென்ன?

மாணவி: ஆங் எம்பேரு செங்கொடி  ணா.

செங்கொடி யார் என தெரிந்தவர்களுங்கு புரியும் இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.