08/10/2017

பரந்த தமிழ் மாநிலம்...


1930களில் மொழிவாரி மாநில உரிமைகள் அளிக்கப்பட்டபோது...

முற்கால வரலாறு அனைத்தும் மறந்துவிட்டு..

ஐனநாயக முறைப்படி நேர்மையாக
அன்றைய சூழலில் மக்களின் பெரும்பாண்மை மற்றும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டுதமிழ் மாநிலம் அமைக்கப் பட்டிருந்தால் அது இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்...

இது தவிர குடகு நம்முடன் இணையத் தயாராக இருந்தது..

அந்தமான் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவான பெரிய-அந்தமானில் தமிழர் பெரும்பாண்மை என்ற வகையில் அத்தீவுக்கூட்டம் முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கும்..

இது நடந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, மலையகத் தமிழர் பிரச்சனை, அகதிப் பிரச்சனை என எந்த பிரச்சனையும் இருந்திருக்காது...

நாம் 1900களில் மற்ற இனங்களைப் போல அரசியல் விழிப்புணர்வும் இனவுணர்வும் பெற்றிருந்தால் நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகள் இருந்திருக்காது.

மனம் சோராமல் இழந்ததை மீட்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.