09/10/2017

ஜெர்மனியும் தமிழகமும்...


தற்போதைய ஜெர்மனி நாடானது ஜெர்மானிய பெரும் நிலத்தின் ஒரு பகுதிதான்..

ஆஸ்திரியாவும் லக்சம்பர்க்கும் கூட ஜெர்மானிய நாடுகள்தான்..

இது போக பிரான்சிடமும் இத்தாலியிடமும் டென்மார்க்கிடமும் ஸ்லோவேனியாவிடமும் சிறிய சிறிய ஜெர்மானிய பகுதிகள் உள்ளன..

ஸ்விட்சர்லாந்தின் முக்கால்வாசி ஜெர்மானியரே..

போலந்திலும் செக் குடியரசிலும் இருந்த ஜெர்மானியர் உலகப் போருக்குப் பிறகு விரட்டப்பட்டுவிட்டனர்..

நீல நிற கோடு 1910வரை ஜெர்மானியர் வாழ்ந்த நிலப்பரப்பு.

இதை நமது சூழலுக்கு பொருத்திப் பார்த்தோமானால்...

இன்று தமிழ்நிலம் ஏழு துண்டுகளாக சிதறுண்டு உள்ளது...

1.தமிழகம்
2.ஈழம்
3.கிழக்கு கேரளம்
4.தென் கன்னடம்
5.தென் ஆந்திரம்
6.புதுச்சேரி
7.மலையகம்

ஐரோப்பாவிற்கு ஜெர்மானியர் எப்படியோ அதே போல் இந்திய துணை கண்டத்திற்கு தமிழர்...

ஒருவேளை அண்டை மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்கமுடியாது போனாலும்...

ஈழம் தனிநாடாக ஆனாலும்...

தமிழகம் மட்டும் தன் வலிமையால் தனிநாடாகி மாபெரும் வல்லரசாக உருவெடுக்க முடியும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.