15/11/2017

பலி – தமிழர் அறிவியல்...


தமிழர்கள் வாழும் கிராமங்களில் அடிக்கடி காணும் ஒரு காட்சி குலதெய்வ கோவிலில் ஆட்டையோ , சேவலையோ கழுத்தை அருத்து பூசாரி ஒருவர் இரத்தம் குடித்து குறி சொல்லுவார், அந்தநேரம் அவரின் உடல் துடித்தாடும் , அசுர பலம் அவருக்கு உண்டாகும், தைரியம் உண்டாகும், சிந்தனை கூர் அடையும், ஒருவித பதட்டம் ஏற்பட்டு அவரை அறியாமல் ஒரு ஆட்டம் ஆடுவார்…

இதை தமிழர்கள் சாமி ஆடுதல், முருகு, கருப்பு ஆடுதல் என பல்வேறு பெயர்களில் அழைப்பதுண்டு.. பலர் இதை ஒரு காட்டுமிராண்டி தனம் எனவும், அறிவுக்குப் புறம்பான உயிர்நேயம் அற்ற தனம் எனவும் தமிழர்களே பேசி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் வாழ்ந்த அனைத்து இன மக்களும் இதை கடைபிடித்தார்கள் , குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இதை இன்றளவும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

அப்படி என்ன இந்த பலி கொடுத்தலில் அறிவியல் இருக்கப்போகிறது ? அதை ஏன் உலகம் முழுவதும் மக்கள் கடைபிடித்தார்கள் ? இதற்கான பதிலில் தமிழரின் போர் மரபு மறைந்துள்ளது.

இயற்கையில் அனைத்து விலங்குகளிடமும் அட்ரினலின் (adrenaline) அல்லது எபிநெப்ரின் (Epinephrine) என்ற இயக்குநீர் (hormone) உள்ளது.

ஒரு விலங்கு அபாயத்தை உணர்ந்தால் இந்த இயக்குநீர் அதன் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். இந்த இயக்குநீர் அந்த விலங்கு தப்பித்து ஓட அல்லது எதிர்த்து சண்டையிட தேவையான உடனடி உடல் பலத்தை அந்த விலங்கிற்கு கொடுக்கும்.

அதாவது ஒரு விலங்கு தனக்கு ஆபத்து வருவதை உணர்ந்தவுடன் அட்ரினலின் அட்ரினலின் சுரப்பிகளில் சுரந்து இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும், அட்ரினலின் முதலில் நரம்பு மண்டலத்தை வேகமாக இயங்க உந்துகிறது , அது அந்த விலங்கின் செயல், சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை கூர்மை படுத்துகிறது.
நுரையீரல்களின் திறனை அதிகரித்து மூச்சு திறனை வேகப்படுத்தும், இதயத்துடிப்பை அதிகரிக்கும், இரத்தத்தை கால் நோக்கி நகர்த்தி வேகத்தை கூட்டும், தசைகளை இறுக்கம் பெற செய்து உடல் பலத்தை அதிகரிக்கும்.. மற்றும் உடல்கொழுப்பை உடனடியாக கரைக்கும், உடலில் உள்ள சக்கரையை உடனடியாக செரித்து அந்த விலங்கு சன்டையிடவோ அல்லது தப்பிக்கவோ தேவையான பலத்தை உடனடியாக தரும்.

இந்த இயக்குநீர் மனித உடலில் சுரந்தாலும் அதை அதிகரிக்க தமிழர்கள் கண்ட நுட்பம் தான் பலி கொடுத்து இரத்தம் குடித்தல், விலங்கின் கழுத்தை அடிப்பக்கமாக அறுத்தால் அந்த விலங்கின் இரத்தத்தில் பயத்தின் காரணமாக அதிகப்படியான அட்ரினலின் சுரந்து கலந்திருக்கும்.. அதை அப்படியே குடிப்பதின் மூலம் அசூர பலம் உடனடியாக நம் உடலில் உண்டாகும்..

சமீபமாக விக்ரம் நடித்து வெளியான இருமுகன் என்ற இல்லுமினாட்டி படம் இதை மையப்படுத்தி வெளியான படமே.

ஆதிகாலத்தில் தமிழர்கள் போருக்கு தயாராகும் முன் இதற்காகவே பலி கொடுத்தார்கள்.

அட்ரினலின் நமது சிந்தனையையும் அதிகரிப்பதினால் அதை சமுக பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுத்தினார்கள் இதுவே குறி கூறுதலாகவும்.. சாமியாடுதலாகவும் தோன்றுகிறது..

பலி கொடுத்தலும் தமிழர் மரபே.. அதுவும் ஓர் அறிவியலே.. அதை நாம் ஒருபோதும் இழந்துவிட கூடாது..

இதையும் தடைசெய்ய இலுமினாட்டிகள் தொடர்ச்சியாக பல முறை முயற்சி செய்து வருகிறார்கள்..

நம் அடையாளங்களை அழியாது காப்போம். உண்மையை ஆராய்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.