23/12/2017

இதுவரை இல்லாத அளவு ஆர்கே நகரில் அதிக அளவு வாக்கு பதிவு 77.68% வாக்கு பதிவு, என்ன காரணம் ?


ஆண்களை விட பெண்கள் அதிக அளவு வாக்கு செலுத்தியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என ஆர்கே நகர் வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவிக்கின்றன.

எப்பொழுதும் பணம் கொடுத்து விட்டு ஓட்டு போட சொல்வார்கள் ஆனால் இந்த முறை டிடிவி அணியினர் 20 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் 25 ஆம் தேதி நீங்க ஓட்டு போட்ட மைய காட்டி பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என் கூறியதால் ஆர்கே நகர் மக்கள் முன்டி அடித்துக் கொண்டு இந்த முறை அதிக அளவு வாக்கு செலுத்தியிருப்பதாக ஆர்கே நகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டு போட்ட மையை காட்டவில்லை என்றால் பணம் கிடைக்காது என்ற பதட்டத்தில் ஆர்கே நகர் மக்கள் பதறிக் கொண்டு ஓட்டு போட கூட்டம் கூட்டமாய் வந்ததாக ஆர்கே நகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலை 5 மணி ஆகியும் கூட்டம் குறையாமல் இருந்தது குறிப்பிடதக்கது.

நாங்கள் பணம் வாங்கினாலும் யாருக்கு போட வேண்டுமோ அவர்களுக்குதான் போடுவோம் என பல ஆர்கே நகர் வாக்காளர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருப்பது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.