30/12/2017

ஜென்கெம் - குடலை குமட்டும் பதிவு.. விரும்பாதோர் வாசிக்காமல் இருப்பது நலம்...


ஜென்கெம் இதான் இதன் பெயர் கடந்த பல ஆண்டுகளாக மேற்கத்தைய மக்கள் இதன் பெயரை உச்சரிக்காமலோ கேள்விப்படாமலோ அல்லது இதை உட்கொண்டு உணராதவரோ இருக்க முடியாது.

JENKEM இது ஒரு வகையான போதை வஸ்து.

இது 1990 களில் ஜம்பியன் மக்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

அதுவும் இதை கண்டு பிடித்தவர்கள் சிறுவயது குழந்தைகள் என்றால் நம்ம முடிகிறதா?

ஆம் உண்மையும் கூட..

இதை தடைசெய்வதை பற்றியும் எப்படி இந்த போதையை தடை செய்ய முடியும் என்று குழம்பி போனது உலகம்.

இது என்ன பெரிய விஷயமா.. ஒரு அரசாங்கதால் இந்த போதை தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்க வேண்டியது தானே என்று நீங்கள் நினைக்கலாம்.. அது தவறு..

ஏன் தடை செய்யப்பட முடியவில்லை என்று இறுதியில் காரணம் கூறுகிறேன் புரியும்.

1995 ல் இந்த போதையால் ஆட்கொண்ட ஒரு நபரை அழைத்து அவரை சோதித்தது மருத்துவ உலகம்.

அப்போது அவர் கூறியது என்னத் தெரியுமா?

இந்த போதை வஸ்து காற்றின் ஊடாக வாய்க்குள் செலுத்தப்படும்.. சென்ற சில நிமிடங்களில் தலைக்குள் இருந்து ஒரு குரல் என்னோடு பேசிக்கொண்டே இருந்ததாக அவர் கூறினார்.

(இது தொடர்ந்து உபயோகப்படுத்தியதால் வந்த விளைவு)..

ஆனால் எனது குடும்பம் எனது மனைவி எல்லாம் தெளிவாக தெரிகிறது என்றும் கூறினார்.

இதே காலகட்டத்தில் ஒருவர் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்துக்குள்ளாகி பலரை சாகடித்துள்ளார்

அவரை விசாரித்ததில் வங்கியில் கொள்ளை அடித்து செல்லும் வழியில் இவ்வாறான விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிகிறது.

பிற்பாடு அவர் சொன்னது அவர் அந்த சம்பவம் நடந்த இரவு ஜென்கெம் என்ற போதையை உபயோகப்படுத்தியுள்ளார் என்றும் பின்னர் நன்றாக நான் தூங்கி விட்டேன் நடந்த எதுவுமே எனக்கு தெரியாது சுத்தமாக நியாபகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

பின்னர் தான் தெரிய வருகிறது இதன் போதையால் இரவில் சுற்றித்திரியும் மிருகம் போன்று நாம் ஆகிவிடுவோம் அதாவது தூக்கத்தில் நடப்பது போன்று தான் ஆனால் எல்லாமும் வேலை செய்யும்.

விடிந்தால் நானா அப்படி செய்தேன் என்ற வியப்பில் ஆழ்த்தும்.

கொலை , கொள்ளை, கற்பழிப்பு, ஆழ் மனதில் வைத்து இருந்த அத்தனையும் வெளிப்படையாக வெளியே வரும்.

சரி இதை ஏன் உலகம் முழுவதும் தடை விதிக்க முடியாமல் போனது தெரியுமா?

இதன் உருவாக்கம் தான்.

இது எப்படி உருவாகிறது தெரியுமா?

நீங்கள் நம்பினால் நம்புங்கள் மனித கழிவுகளால் தான் உருவாகிறது..

மனித மலம் மற்றும் சிறுநீர் எடுத்து கண்ணாடி குவளையில் கரைத்து ஊற்றி குடுவையின் மேல் பாகத்தில் பலூனின் வாய் பகுதியை இருக்கி வைத்துவிட வேண்டும்.

(மற்றொரு பொருளையும் இதில் கலக்க வேண்டும் அப்போது தான் முழு போதையாக மாறும் அந்த பொருள் பற்றி சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்)

சூரிய ஒளி படாமல் சில நாட்களுக்கு பிறகு எடுத்தால் கழிவுகள் மூலம் வெளிப்படும் ஒரு வகையான பிராணவாயு பலூனை உப்பி ஊதிய பலூன் போன்று இருக்கும்.

இதை அப்படியே தமது மூக்கில் மற்றும் வாயில் பலூனை செலுத்தி அந்த நாத்தம் புடிச்ச காற்றை திங்க வேண்டும் அல்லது சுவாசிக்க வேண்டும்.

இப்போது புரிகிறதா மனித கழிவை எப்படி தடை விதிக்க முடியும்.

தற்சமய அறிக்கை ஒன்று வெளியானது..

இந்த போதையை உபயோகப்படுத்தும் பலர் எய்ட்ஸ் நோய் மற்றும் புற்றுநோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றாரகள் என்கிறது.

ஒரு முறை உபயோகித்தாலும் பாதிப்பு வருவது உறுதி.

இதை பற்றிய கருத்து முரண்பாடுகள் நிறையவே  உண்டு..

எது எப்படியோ எதையும் தெரிந்து
கொள்வது அவசியம்.

ஏன் இதை பற்றியெல்லாம் தேவையில்லாமல் பேச வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு..

மனித கழிவு நம் உடலில் இருக்கும் போது விஷமாக மாறி நம்மை தாக்காமல் வெளியே வந்து சாதாரண கழிவுக்கு  கூட இப்பேர்ப்பட்ட சக்தி உண்டு என்பதை யோசிக்கையில் பல விடயங்கள் புரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.