20/12/2017

தரமற்ற டிரான்ஸ்பா்மர் விழுந்ததால் பரபரப்பு...


திருப்பூர் மாநகரம் 18 வட்டம் வாவிபாளையம் கிழக்கு ஜெயஸ்ரீ நகர் பகுதியில் உள்ள புதிய  தொழிற்சாலைக்கு புதியதாக இன்று மின் மாற்றி அடைக்கப்பட்டது. அப்போது தரமில்லாத மின்சார பொருட்களை கொண்டும் மின்வாரியத்திற்கு சம்பந்தமில்லாத திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மர்ம நபர்களை வைத்து அலட்சியத்தில் பணிசெய்த காரணத்தால் தற்போது டிரான்ஸ்பார்ம் உடைந்து விழுந்து விட்டது பல மணி நேரம் ஆகியும் இது வரை மின்வாரிய உயரதிகாரிகள் வரவில்லை.

இதனால் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.