06/12/2017

தீர்க்க தரிசனம் : வானத்தில் வருபவர் இயேசுவா இல்லை வேறு ஒருவரா?


இறுதிகாட்சி என இறக்கி வைத்த காட்சிகளில் இயேசு தன் வாயால் தான் முன்னுரைத்த தீர்க்க தரிசன காட்சி இறுதியிலும் இறுதி காட்சியாக முக்கியமானதாக இடம் பெற்றிருக்கிறது..

இயேசு முதல் வருகையிலே தன் சீடர்களுக்கு செப்பிநின்ற தீர்க்க தரிசனக் காட்சிகளில், இந்த மனுஷகுமாரன் மேகத்தினிடையே வருவதை நீங்கள் காணுகின்ற போது இயேசுவாகிய என்னை அறிந்து கொள்ள இயலும் என சொல்லியிருக்கிறார்..

அதுவரை இயேசு அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார் எனச்சொன்னால் நம்பாதீர்கள்  என சொல்லியிருக்கிறார்.

இப்படி சொன்ன இயேசு பல இடங்களில் தன்னை சுட்டிகாட்டும் போது நான் என்ற வார்த்தையால் சொல்லி நின்றவர், இந்த இடத்தில் நான் என்ற சொல்லால் தன்னை குறிப்பிடவில்லை, மனுஷகுமாரன் வருவார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன, நான் பிதாவினிடத்தில் போனால் தான் பிதா வேறொரு தேற்றரவாளனை பூமிக்கு அனுப்புவார் என்று சொல்லும் போது கூட தன்னை நான் என்று அழைத்த இயேசு இறுதி காட்சியில் மேகத்தினிடையே  நான் வருவேன் என்று ஏன் சொல்லவில்லை.

நான் என்ற சொல்லுக்கு பதிலாக மனுஷகுமாரன் வருவார் . மனுஷகுமாரனை நீங்கள் காணும் போது என்று சொல்லுகின்ற இடத்தில் நீங்கள் என்னை காணும் போது என்று சொல்லவில்லை.

ஆனால் பூமி தொடர் பூகம்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கும், நெருப்பாறு ஓடிகொண்டிருக்கும்  வேளையில் நானும் என் பிதாவும் இந்த பூமியில் இருப்போம் என சொல்லியதிலிருந்தே  தற்போது பூமியில் இறைவனும்  அவரும் (இயேசுவும்) வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா..

 இப்படி பூமியில் இறைவனும் இயேசுவும் வாழ்ந்து கொண்டிருக்க, நிச்சியம் அவருக்கான சொல்லப்படும் மிக சிறிய புதிய திருச்சபை உண்டாயிருக்க வேண்டும். அந்த திருச்சபை பூமியில் தன் ஞானப்பணிகளை ரகசிய வருகை நிமித்தம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

இப்படியிருக்க வானத்திலிருந்து வருபவர் யாரென்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இந்த மூன்றாமவர் வரும் போது தான் இயேசு அம்பலம் ஆகும் சூழல் உருவாகி நிற்க வேண்டுமல்லவா.

எபிரேய மொழியில் உள்ள மூல பைபிளில் யோவானினன் திருவெளிப்பாடு காட்சியில் மூன்று சிம்மாசனங்கள் ஒரே சம அந்தஸ்த்தில் வைக்கப்பட்டு, நடுவில் இறைவனும் ஒன்றில் இரண்டாம் வருகை இயேசுவும், மற்றொன்றில் தூயஆவியாரும் அமர்ந்திருக்கின்ற காட்சி விவரிக்க பட்டிருக்கிறது.

ஆனால் இன்று இந்தியாவில் எல்லோர் கைகளிலும் இருக்கின்ற பைபிளில் ஒரு சிம்மாசனம் என இருட்டடைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

மூலப்பிரதியின் கருத்தை முனைந்து பார்த்தால் " திரித்துவ தத்துவம் " சிறப்பாய் தென்படுகிறது அல்லவா.


இதை தான் ஆதி இந்து மார்க்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன், என சுட்டிகாட்டி நின்றது  பிதா என்கின்ற சிவன், இயேசு என்கின்ற மகாவிஷ்ணு, தூயஆவியார் என்கின்ற பிரம்மன், என்கின்ற கருத்தொற்றுமை உங்களுக்கு கச்சிதமாய் தெரிகிறது அல்லவா.

அத்தோடு இந்த இறுதிக்காட்சி இந்தியாவில் தழிழ்நாட்டில் தான் அரங்கேறப் போகிறது என்று நினைக்கும் போது, இந்து மார்க்கம் கொண்ட திரித்துவ தத்துவம் எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருக்கிறது என்பதை காண்கிறோம் அல்லவா..

இறுதி காட்சிகள் அரங்கேற்றம் ஆகும் இடம் வெளிநாட்டு தீர்க்கதசிகளுக்கு அவ்வளவாய் விளங்காது  என்பதாலும், இறுதி காட்சிகள் இடம்பெறப் போகுமிடம் தமிழ்நாடு என்பதால், இங்கே பிறந்த தீர்க்கதரசிகள் தெளிவாய் அடையாளமிட்டு காட்ட முடிகிறது.

இப்போது பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரைப் பற்றி (இறைவன், இரண்டாம் வருகை இயேசு) ஒரு சிறிய சபைக்கே தெரிந்திருக்கும், உலகத்திற்கு இன்னும் அவர்கள் வெளிப்படவில்லை, அந்த வெளிப்படுதலுக்கு ஒருவர் தேவைபடுகிறார் அவர் தான் தூயஆவியார் என்ற பிரம்ம தேவன்..

அவர்தான் வரவேண்டிய "மானுடமகன் ". இயேசு தன் காலத்தில் தன்னோடு பரிட்சயமான அனைவருக்கும் உபதேசம் செய்கின்ற போது  உண்மைகளை, உவமைகள் போல் தோன்ற உணர்த்திடுவார், இயேசு சொன்ன ஏதும் உவமைகளாக இருக்காது.. எல்லாம் இறுதி காலக்கட்ட காட்சிகளை உணர்த்தும் உண்மைகளாயிருக்கும்.

அப்படி பார்த்தால்  இறை ராஜ்ஜியம் எப்போது என கேட்டதற்க்கு இயேசு அளித்த பதில் " என் மாம்சத்தை புசித்தவனும் என் இரத்தத்தை பானம் பண்ணுபவனும்  ஆகிய ஒருவனை  நான் எழுப்பாத வரை  இறை ராஜ்ஜியம் வராது  என்று (யோவான் 6.54-56) சொன்னதை நினைவு கூர்ந்து பாருங்கள். 

இதில் அப்பபமோ திராட்சை ரசமோ கையில் எடுத்துக்கொண்டு  இயேசுவின் இரத்தம் என்றோ, சதை என்றோ சொல்லிக் கொண்டு உண்பதால் ஒரு பயனும் விளையப் போவதில்லை.

கிருஸ்துவர்கள் ஒருவர் கூட இரண்டாம் வருகை இயேசுவின் திருச்சபையில் இடம் பெறப் போவதில்லை..

நான் அந்நியனாய் இருப்பேன் என்ற இயேசுவின்  வாக்கின்படியும் , அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட செவன்த்டே அட்வண்டிஸ் வெளியிட்ட "ஞாயிறு ஆசரிப்புச்சட்டம் என்ற நூல் இக்கருத்தை வலுவாய் உறுபடுத்திநிற்கிறது.

இதை நபி அவர்களும்  இயேசு (இரண்டாம் வருகை) வந்தவுடன் சிலுவையை முறிக்கிறார்  என்று சொல்வதையும்  இணைத்து பாருங்கள்.


இயேசுவின் கூற்றுபடி எழுப்பபடும் அந்த ஒருவன் யார்?

இந்த கேள்வி விடைபுரியாத புதிராகயிருந்தாலும், தமிழ்நாட்டின் சித்தர்களின் தீர்க்கதரிசனங்களின் விளக்கத்தின்படி இறுதியில் வருகின்ற அவரின் மகனே அந்த மானுட மகன்.

தானியல் தீர்க்கதரசி வானத்திலிருந்து வருபவரை அழைத்துக் கொண்டு  சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின்  அருகில் கொண்டு வருகின்றனர், சிம்மாசனத்தில் சர்வவல்லமை யுள்ள இயேசு நரைத்த தலையோடு அமர்ந்திருக்கின்ற காட்சியையும் அவர் வானத்திலிருந்து  வந்த மானுடமகனுக்கு முடி சூட்டி இன்று  முதல் இந்த  உலகம் எனக்கு கொடுக்கின்ற மரியாதையும், வணக்கத்தையும், தொழுதலையும் இவருக்கும் கொடுக்க வேண்டும் என உத்தரவிடும் காட்சியை (தானியேல் 7-13) காணும்போது  இருவரும் வெவ்வேறானவர் ஒருவர் வயதானவர் ஒருவர் சிறியவர் என்பதும் புலப்படுகிறது அல்லவா.

அத்தோடு தானியல் இறுதியிலும் இறுதிகட்ட காட்சியிலே நடுங்கவைக்கும்  தீட்டு இறைவனின் உறைவிடத்தில் நிற்க காணும் போது என சொல்லி நிற்பதை  சாதரண விஷயமாக விட்டுவிடக் கூடாது  என்பதற்காகத்தான்  முதல்வருகை இயேசு முன்னே மொழிந்து நின்ற வார்த்தை தானியேல் தீர்க்கதரசி இருக்கானே அவன் சொன்ன நடுங்கவைக்கும் தீட்டு வராத வரை இறையரசை காணமாட்டிர்கள் என சொல்லி நின்றதை பாருங்கள்.

எந்த நடுங்க வைக்கும் தீட்டு திருச்சபையில் முதலாவதாக துயரமும் துக்கமும் தொடக்கத்தை கொண்டு நின்றதோ அதனுடைய முடிவில் தான் இயேசு சொன்ன எழுப்பதலும் இருக்கிறது.

ஒருவனை எழுப்பாத வரை என்ற வார்த்தை அழுத்தம் கொடுத்து சொல்வதின் காரணம் புரிகிறதா உங்களுக்கு இப்பொழுது.

அப்படி எழுப்பப்பட்டவர் தான் வானத்திலிருந்து வரும் பரிசுத்த ஆவியார்.

இதே ஆதிகால இந்து மார்க்கத்தின் பிரகாரம் திரித்துவ மூவரில்  சிவன் ஒருவர் அவர் இறைவன், மற்ற இருவர் இறை அந்தஸ்த்திற்கு  உயர்த்தபடுபவர்கள், அதில் ஒருவர் "மாகாவிஷ்ணு" மற்றொருவர்  "பிரம்மா " மகாவிஷ்ணுவின் மகன் பிரம்மதேவர் என்பதை சுட்டிகாட்ட வரையும் ஓவியங்களிலே மகாவிஷ்ணுவின் தொப்பளிலிருந்து உதித்தெழும் தாமரை கொடியில்  தாமரை மலரில் பூத்த மகன் இந்த மூத்தமகன் (ஆதாம்) பிரம்மா என மிகச்சரியாக சுட்டிகாட்டி நிற்கிறது இந்து மார்க்க தத்துவம்.

அத்தோடு அல்லாமல் பிரம்மா என்பவர் ஒவ்வொரு கல்பத்திலும் மனுஷகுமாரனாய் இருந்து மரணித்து எழுப்பப்படுபவர்.

அப்போது தான் புது கல்பம் பிறக்கும் என இந்துமார்க்க சாஸ்திரம் சொல்வதை சிந்தனையில் கொண்டு வருக.

எனவே இறுதியில் இறைவனோடு எழும் இறுதி சபை மூன்று பெரும் அங்கங்களை கொண்டு நிற்கிறது என உணர முடிகிறது.

இறைவன் மகாவிஷ்ணு என்கின்ற இயேசு பிரம்மா என்கின்ற தூயஆவியார்.

இதில் இரண்டாமவர் பூமியில் இருக்க எழும்பும் நேரம் வரும்போது, மூன்றாமவரின் வருகை முக்கியத்துவம்  வாய்ந்ததாயிருக்கிறது.  இவரே இயேசுவிற்கு முன்நின்று சகல அதிகாரங்களையும்  இயேசுவிடமிருந்து பெற்று கொண்டு Chief commandar ஆக பவனிவருகிறார்.

இந்த பரிசுத்த ஆவியாரே, மானுடமகனே முன்நின்று அனைத்தையும் செய்கிறார் உலகை ஒரு குடைக்குள் கொண்டு வந்து இறையரசை போகர் என்ற மகாவிஷ்ணு என்ற இரண்டாம் வருகை இயேசு வின் தலைமையில் ஓராட்சி முறையை ஏற்படுத்தி முன் நின்று ஆள்பவர்.

நியாயதீர்ப்பையும், இரண்டாம் வருகை இயேசுவிற்கு முன்னின்று அவர் சார்பாக தீர்ப்பிடும் வேலையையும் இந்த மானுடமகனே செய்கிறார்.

அதர்மத்தை அறவே ஒழித்து தர்மத்தின் காலத்தை நிலைநாட்டி நிற்கிறார்.

இயேசு எந்த இடத்திலும் நான் வானத்திலிருந்து வருவேன் என்று கூறவேயில்லை..

விண்ணகம் என்ற பதம் பூமியில் இருக்கும் இறைசபையை குறிக்கும்.

இக்கருத்து இவ்வாறு இருக்க கிருஸ்துவ மதத்திலே ஒரு பிரிவினர் வானத்திலிருந்து இயேசு வருகிறார் என்றும், மற்றொருபிரிவினர் இயேசு ஏற்கனவே வந்துவிட்டார், தூயஆவியார் தான் வர வேண்டியிறருக்கிது என்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷியங்களை தெரிந்த போதகர்கள் கூட இதை நன்கு பிரகடணப்படுத்தாமல் பட்டும் படாமல் சொல்லிவிட்டு அவர்களே பின் பொதுமக்களை  காணுகின்ற போது  வானத்திலிருந்து இயேசு வருவார் என பொய்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியிருக்க தமிழ் சித்தர்கள் தெளிவாக இயேசுவிற்கும் தூய ஆவியாருக்கும் உள்ள உறவு என்ன என்பதை தெளிவாய் குறிப்பிட்டு நிற்கிறார்கள்.

எனவே தமிழ் யோகியின் தீர்க்க தரிசனங்களில் திவ்ய காட்சிகள் படி வானத்திலிருந்து  வருபவர் இயேசு அல்ல போகரும் அல்ல வருபவர் எலியா தீர்க்கதரசி அல்லது திருமுழுக்கு யோவான் என்று குறிப்பிட்டு நிற்பது தான் உத்தமும் உண்மையும் ஆகும்.

முதலாம் வருகையில் இயேசுவை வெளி உலகத்திற்கு அடையாளபடுத்தி நின்றவர் திருமுழுக்கு யோவானே ஆவார்.

இதே திருமுழுக்கு யோவான் தான் மீண்டும் உலகிற்க்கு இரண்டாம் வருகை இயேசுவை  அடையாளபடுத்த வேண்டும், அதனால் தான் திருமுழுக்கு யோவானை பற்றி கூறும்போது இறை ராஜ்ஜியத்தில் ஆளும் செனட்டில்  மிக அதிகாரம்  கொண்ட இளையவராய் இருப்பார் என்று குறிப்பிட்டத்தை சிந்தையில் கொண்டால்  வரும் பரிசுத்த ஆவியார் திருமுழக்கு யோவானே ஆவார்.

இவருடைய முற்பிறப்பு எலியா தீர்க்கதரசி  அவரே வானத்திற்க்கு அப்படியே எடுத்து கொள்ளப்பட்டவர் அப்படியே இப்பொழுதும் எழுப்பபட்டு திரும்ப வருபவர்.

இறுதிகட்ட செனட்டில் தலைமை பொறுப்பில் இருப்பவர்  மரணமில்லா பெருவாழ்வு கொண்டவரும் அவரே ஆவார்.

இப்படி அனைத்தையும்  ஆய்வுகூர்ந்து பார்க்கின்ற போது தீரக்கதரிசன காட்சிகளை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கின்ற போது நாம் பரிசுத்த ஆவியாரின் பிரம்மாவின் வருகை நிகழும் நாளில் நிற்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது, அந்த நாள் மிக விரைவில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.