11/01/2018

சூளகிரி அருகே ஓடும் அரசு பேருந்தில் பயணி பலி...


பெங்களுரிலிருந்து திருக்கோவிலூர் சென்ற அரசு பேருந்தில் கட்டிட தொழிலாளிகள் இருவர் ஏறியுள்ளனர்.

திருக்கோவிலூர்  செல்ல இருவருக்கும் பயணக் கட்டணம் ரூ.300க்கு பயணச் சீட்டு புதிய நடத்துனர்  வழங்கியுள்ளார்.

சூளகிரி  அருகே வரும் போது  இருவரில் ஒருவர் உடல் நிலை சரியில்லாததால் இறந்து விட்டார்.

இதையறிந்த நடத்துனர் பேருந்தை நிறுத்தி  இறந்தவரையும் உடன் வந்தவரையும் சூளகிரி புறவழிச்சாலையில் இறக்கி  விட்டு பயணச் சீட்டையும் வாங்கிக் கொண்டு  சென்றுள்ளார்.

இறங்கிய பயணி பயணச் சீட்டை தர மறுக்கவே, மனுசனே டிக்கெட்  வாங்கிட்டான், உனக்கெதுக்கையா டிக்கெட் என நக்கலடித்து பயணச் சீட்டை பறித்துச்  சென்றார்.

தற்போது உடன் வந்தவர் உடலை திருக்கோவிலூர் எடுத்துச் செல்வது எப்படி என விழித்துக் கொண்டிருக்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.