02/02/2018

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே...


தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே. என்பது என்னைப் பொருத்தவரை, அரசியல் கருத்தல்ல. சமூகப் பொருளாதாரக் கருத்து. இது தமிழர்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதும் அல்ல. அனைத்து சமூக இனங்களுக்கும் பொருந்தக்கூடியது.

இங்கு வந்து கூலிக்கு வேலை செய்யும் பிற மாநிலத்தவர்கள் அவரவர் மாநிலங்களில் உரிய ஊதியத்துடன் மரியாதையுடன் வேலை செய்ய வேண்டும் என்பதையும் உள்ளடக்கியதே இக்கருத்து.

இன்னொரு வகையில் பார்த்தால், தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளப் போகும் ஒரு சமூகப் பேரிடருக்கான எச்சரிக்கை மணி இது. இப்போதே உணர்ந்து கொண்டு செயலாற்றினால், அடுத்த தலைமுறைக்கு அரசுப் பணிகளில் இடம் இருக்கும்.

அரசியல் நிலைப்பாடுகளின் பெயரால்,  சித்தாந்தங்களின் பெயரால், இக்கருத்தினை இப்போது ஏளனம் செய்பவர்கள், எதிர்ப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு கேடு விளைவிக்கிறீர்கள் என்பதை காலம் கடந்தேனும் உணர்ந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

- ப.கலாநிதி

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’
சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு!
நாள்: பிப்ரவரி 3, 2018
இடம்: அண்ணா அரங்கம், சென்னை
நேரம்: காலை 9 மணி - மாலை 8 மணி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.