20/04/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி -9...

சத்திய யுகம் எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 9-ம் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்க தரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் யாவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.


9-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் மயிலாடுதுறை மக்களின் கவனத்தை ஈர்க்க உள்ளதாகவும், அங்கு உள்ள ஒரு ஆன்மீக அமைப்பில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இருப்பதாகவும், சித்தரை 18-ம் நாளிலிருந்து இந்த சம்பவங்கள் துவங்கிட உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


காலத்தால் அழிக்க முடியாத காவியமான ஆதிசக்தியின் அவதாரக் கொள்கைகள் யாவும் இப்பூமி முழுவதும் வேர் ஊன்றும் நேரம் வந்துவிட்டது என்றும், இனி மதங்கள் யாவும் ஆட்டம் காணும் பல்வேறு சூழ்நிலைகள் இப்பூமியில் தொடர் நிகழ்வுகளாக நடக்க உள்ளதாக சத்திய யுகத்தின் 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



கோவிலூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஊர் என்றும், அங்கு உள்ள ஒரு சிவாலயத்தில் மாபெரும் ஒரு சம்பவம் தற்போது நடக்க இருப்பதாகவும், அச்சம்பவத்திற்கும் தஞ்சைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய நிகழ்வை பற்றி இங்கே தெரிவிக்கின்றது.



அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் இந்த நாடுகளின் உறவுகளுக்குள் பெரும் விரிசல்கள் உருவாகி பெரும் போர் பதற்றம் ஒன்று தற்போது உருவாகும் சூழல் இருப்பதாகவும், ஒரு நாட்டின் அழிவை இந்த நாடுகள் பார்க்க உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது. “சிரியா“வின் போர் பதற்றம் பல நாடுகளுக்கு வேதனைதரக்கூடிய நிகழ்வாக அமையும் என 9-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.


தமிழகத்தில் இனி போராட்டங்களும், மக்கள் பல எழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் தொடர் நிகழ்வுகளும் நடக்க இருப்பதாகவும் இது தமிழகத்தின் அவலநிலையை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்வாக அமையும் என 9-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


தமிழகத்தில் இனி பல திடுக்கிடும் சோகச் சம்பவங்கள் பல நடக்க உள்ளதாகவும், அதன் அறிகுறியாக தமிழக அம்மன் கோவில்களில் “தாலி“ இறங்கும் நிகழ்வு இனி அடிக்கடி நடக்கும் என்றும், இது “சுமங்கலி“ பெண்களுக்கு போதாத காலமாக மக்கள் கூறுவார்கள் என்றும், ஆனால் இது அதற்கான நிகழ்வு அல்ல என பெண்கள் மிக முக்கியமாக கருத வேண்டும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு நிகழ்வை எச்சரிக்கை செய்கிறது. அதே சமயத்தில் இந்நிகழ்வினால் தமிழக மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சேலத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு புதைபொருள் ஒன்று பூமி அதிர்வால் வெளிவரும் நிகழ்வு ஒன்று விரைவாக நடக்க உள்ளதாகவும், இப்பொருளில் உள்ள குறிப்பு என்னவெனில் இவ்வுலகம் மகா மாற்றத்தை தனது அழிவின் மூலம் காண உள்ளதாக இருக்குமென 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சோழர்கள் ராஜ்யம் இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் இனி பல அரசியல் மாற்றங்கள் திடீர் என்று நடக்க உள்ளதாகவும், இது அரசு ஆட்சியாக இல்லாமல் இறை ஆட்சியாக திகழும் ஒரு அதிசய சம்பவம் திடீரென்று சோழர்கள் வாழ்ந்த பூமியிலிருந்து துவங்கிடும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கடவுள் என்ற கோட்பாடுகள் இனி இப்பூமியில் உண்மையாக உருவெடுத்து உலாவும் பல அதிசய சம்பவங்கள் இனி நடக்க உள்ளதாகவும், இந்த பூமியில் அது இந்தியாவின் தென்தமிழகத்தில் அதிகம் நடக்க இருப்பதாக 9-ம் தீர்க்கதரிசனம் தெய்வீக நிகழ்வுகளைப் பற்றி இங்கே நமக்கு தெரிவிக்கின்றன.



கோரக்கர் என்ற சித்தரின் ஜீவசமாதி ஒன்று வெடித்து சிதறும் ஒரு அதிசய நிகழ்வு நடக்க இருப்பதாகவும், இச்சம்பவம் “ஸ்ரீபோகர்“ இப்பூமியில் மீண்டும் கால்ஊன்றிவிட்டார் என்பதற்கான ஆதாரமாக மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அதேசமயத்தில் அந்த நிகழ்வின் எதிரொலியாக சீனாவில் உள்ள புத்த மடாலயத்தின் கதவு ஒன்று திறக்கும் சம்பவம் நடைபெறும் என்றும், இந்நிகழ்வின் மூலம் “போதிதர்மனின்“ இரகசியங்கள் இந்த உலகத்திற்கு தெரிய வரப்போகிறது என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு அரிய அற்புத நிகழ்வை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.



போகர் என்ற சித்தரை தொடர்ந்து அவரின் நேரடி சீடரான புலிப்பாணி சித்தரின் பிரவேசம் கொல்லிமலையில் இருக்கும் என்றும், கொல்லிமலையில் உள்ள ஒரு மலைக்குகையை மலைவாழ் மக்களால் இனி கண்டறியப்பட உள்ளதாகவும், அக்குகையில் போகர் வடிவமைத்து வழிபட்ட ஒரு சிவலிங்கத்தை மக்கள் கண்டு வணங்கும் அற்புத நிகழ்வு தற்போது நடக்க இருப்பதாகவும், இது புலிப்பாணி எனும் சித்தர் பிரவேசம் இப்பூமியில் நடந்தற்கான அறிகுறியாக உலக மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



கோரக்கர், போகர், புலிப்பாணி  இவர்களின் வருகையால் தமிழகம் குளிர உள்ளதாகவும், முருகன் சந்நதி அமைந்த ஒரு ஊர் 7 மணிநேர தொடர் மழையினால் புனிதம் அடையப் போவதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

ஆன்மீக பெரியவர் ஒருவர் தற்போது மரணம் அடைவார் என்றும், அவரின் தொண்டர்கள் தமிழகத்தில் பெரும் சோகத்திற்கு ஆளாக நேரிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இருப்பதாகவும், இது இறைவனின் நீயாயத்தீர்ப்பின்படி அமையும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



இறைவனின் வருகையால் இப்பூமி பெரும் மாற்றங்களை சந்திக்க உள்ளதாகவும், அந்த இறைவனைக் காண பூமியை நோக்கி வேற்று கிரகவாசிகள் வருகை தரும் பல நிகழ்வுகள் இனி நடக்க உள்ளதாகவும், சனி, புளுட்டோ, வியாழன், செவ்வாய், சந்திரன், அக்குவா-பூ எனும் கிரகங்களிலிருந்து வேற்றுகிரகவாசிகள் வருகை தருவார்கள் என்றும், அக்குவா-பூ எனும் கிரகத்தைப் பற்றி இனிதான் விஞ்ஞானிகள் கண்டறிவார்கள் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.


“HR8634813DU“ “156GRG HERTS“ எனும் எழுத்துக்களை விஞ்ஞானிகள் ஆய்விற்காக எடுத்துக் கொள்வார்கள் என்றும், “எலிமிக்கார்னர்“ எனும் பூமியின் சுற்றுவட்டப் பாதையை விஞ்ஞானிகள் தங்களது தொலை நோக்கிகளால் ஆய்வு செய்து உலக மக்களுக்கு பல புதுமையான விடயங்களை தர உள்ளார்கள் என 9-ம் தீர்க்கதரிசனம் புதுமையான ஒரு செய்திக்குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இந்த பூமியில் இனி பல வினோத அதிசய உயிரினங்களை மக்கள் காண்பார்கள் என்றும், அவைகளால் மனிதகுலத்திற்கு எவ்வித தீமைகள் இல்லையென்றும், ஆனால் பல புதுமைகளை மக்களுக்கு அவைகள் தர உள்ளன என 9-ம் தீர்க்கதரிசனம் வருங்கால புதுமைகளை பற்றி இங்கே பதிவு செய்கிறது.

இனி உலக மக்கள் கலைகளின் வாயிலாகத்தான் இறைவனின் அற்புதங்களையும், ஆற்றல்களையும் தெரிந்து கொள்ள முடியும் என்றும், கலைகளின் வடிவாகவே உலக மக்களை இறைவன் ஆளுமை செய்வார் என்றும், அப்படிப்பட்ட விஷயங்கள் யாவும் நமது தமிழகத்திலிருந்தே துவங்கிட இருப்பதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


பல ஆன்மீகவாதிகளின் முகத்திரையை கிழித்து அவர்களை பற்றி உலக மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய பல சம்பவங்கள் இனி இந்தியாவில் அதிகம் நடக்க இருப்பதாகவும், தமிழகத்தில் முக்கிய ஆன்மீகவாதிகள் ஐவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் போலியான வேஷங்களை மக்கள் அறியும்படி செய்யும் தொடர் நிகழ்வுகள் பல இனி நடக்க உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு நிகழ்வுகளை பற்றி சுட்டிக் காட்டுகின்றது.


போலிச்சாமியார் ஒருவனின் சொத்துக்கள் யாவும் அரசு கையகப்படுத்தும் சம்பவம் ஒன்று உடனே நடக்க உள்ளதாகவும், அந்த போலிச்சாமியார் தமிழகத்தை சார்ந்தவர் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இறைவன் அவதரிக்கும் அந்த இறுதி சபையில் மிக அருகாமையில் ஒரு சுப நிகழ்வு அரங்கேற்றம் நிகழ உள்ளதாகவும், அதனை தொடர்ந்து அந்த அமைப்பு உலக மக்களின் கண்களுக்கு விரைந்து அடையாளம் காணப்படும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறைசார்ந்த நிகழ்வை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்கத்தரிசனத்தில் ஏற்கனவே இடம்பெற்ற 12-ம் தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் இனி நடக்க துவங்கும் என்றும், அதற்கான காலமாக நாம்இக்கால கட்டத்தை நினைவில் கொள்ள வேண்டும் என 9-ம் தீர்க்க தரிசனம் மெய்பட இங்கே கூறுகிறது.

மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற அரசியல் தலைவரின் கனவுகள் தமிழகத்தில் நிறைவேறிடும் என்ற கனவில் தமிழக மக்கள் இருக்கும் இச்சமயத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்றும், இதனால் தமிழகத்தில் பல அரசியல் குழப்பங்கள் உருவாகி மக்களை திசை திருப்பும் நிகழ்வுகள் பல நடக்க போவதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே நமக்கு தெரிவிக்கின்றன.


ஏழையின் பங்களான் இறைமகன் இயேசுவின் சுவிசேஷ கூட்டம் ஒன்றில் அதிசயம் ஒன்று நிகழும் சம்பவம் தமிழகத்தில் நடக்க உள்ளதாகவும், அது தூத்துக்குடியில் நடக்கும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை நமக்கு இங்கே சுட்டிக்காட்டுகின்றது.


9-ம் தீர்க்கதரிசனத்தின் குறிப்புகள் ஒவ்வொன்றும் துவங்கும் காலக்கட்டம் மிக,மிக அருகாமையில் உள்ளது என்றும் அது துவங்கும் காலத்தின் அறிகுறியே சிவாலயம் ஒன்று இடிந்து விழும் நிகழ்வு நடைபெறும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

புதுமைகளை மக்கள் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாலும் இறைவனை காண நாம் புத்துணர்வுடன் காத்திருப்போம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.