20/04/2018

சிறுமிகள் கொத்தடிமையாக நூல் மில்லில் வேலை பார்க்கும் அவலம்...



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுப் பகுதியில் உள்ள தனியார் நூல் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளனர் இந்நிலையில் இன்று 18.04.18 காலை 7.55 திண்டுக்கல்லில் கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸில் பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் பயணித்தனர் அவர்களுடன் ஒர் ஆண் பயணித்தார் இச்சிறுமிகள் அனைவரும் பரிதாப நிலையில் பயணித்து வந்தனர் அவர்களை பார்த்து சந்தேகித்த நிலையில் ரயிலில் பயணித்த செய்தியாளர்கள் அவர்களிடத்தில் விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் SSM குருப் வேலாயுத சாமி என்ற தனியார் நூல் தொழிற்சாலையில் பணியாற்றுவதாகவும் அதில் ஒரு சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறுமிகளுக்கான சொந்த ஊரான விருதாட்சலம் சுற்று பகுதியில் கிராம பெண்கள் என்பதால் விருதாட்சலம் ரயில் நிலையத்தில் இறங்கினார்கள் இதில் இவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் பெண் ஊழியர் இல்லாமல் ஒர் ஆணுடன் 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் இதில் குழந்தை தொழிலாளர்களை வைத்து தொழில் செய்யும் நிர்வாகத்தை கண்டித்து செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.