02/07/2018

கர்ப்பிணி பெண்ணின் ஸ்கேனில் பதிவான இறந்த போன தாயின் முகம்...


ஆச்சரியத்தில் மூழ்கிய மகள்
பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் ஸ்கேனில் இறந்து போன தனது தாயின் முகம் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கருவுற்றிருக்கும் ரெபேகா மலியா(Rebecca Melia ) என்பவர் கடந்த யூன் மாதம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் இறந்துபோன தனது தாயின் முகம் பதிவாகியிருந்துள்ளது.

இதுகுறித்து ரெபேகா கூறியதாவது...

இதனை என்னால் நம்பமுடியவில்லை, இதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம் ஏற்பட்டது, எனது ஸ்கேன் அறிக்கையில் தாயின் முகம் இருப்பது அவர் என் மீது வைத்திருக்கும் அளவில்லாத அன்பையே காட்டுகிறது.

இதனை நான் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன், நாம் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் நபர் இந்த உலகத்தை விட்டு சென்றாலும், அவர் நம்முடன் தான் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ஸ்கேன் புகைப்படத்தை ரெபேகா தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார், ரெபேகாவின் தாய் சாரோன்(49) என்பவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் புற்றுநோயால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.