13/07/2018

இதுதான் நிதர்சனம்....



நீங்கள் தீர்வை நோக்கி பலமுறை சென்று இருக்கிறீர்கள், இப்போதும் செல்கிறீர்கள் தலைமை அல்லது தலைவன் என்ற ஒன்றன் பின்னால்,

ஆனால் தீர்வு கிடைத்திருக்கிறதா..?? என்ற கேள்விக்கு மட்டும் இங்கு பதில் என்பது யாரிடமும் இல்லை..

ஏன்..? பதில் இல்லை என யாராவது யோசித்து இருக்கிறீர்களா..???

நம்முன் இதுதான் தீர்வு என ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் முன்வைத்து, அதை நோக்கி நம்மை ஒட வைக்கிறார்கள்..

நாம் ஒடி, ஒடி களைந்து இந்த தீர்வு சரி வர்றாது என நினைக்கும் போது, நம் முன் மறுபடியும் வேறொரு தீர்வை வைத்து மறுபடியும் ஒட வைக்கிறார்கள்...

இறுதிவரை தீர்வு எட்டப்படவில்லை, நமது வாழ்க்கை இறுதி கட்டத்தை அடைகிறது..

திரும்பி நம் வாழ்க்கையின் பிறவி பலன் என்னவென்று பார்த்தால், நாம் அடிமை என்பது மட்டுமே தெரியவரும்..

தீர்வு என்பது இறுதி 5 சதவிகிதம் தான்,
அதற்கான அடித்தளத்தை கட்டமைக்க முயலுங்கள், அந்த அடித்தளம் உங்களின் ஒருமித்த சிந்தனைகளால் வலிமையாக கட்டமைக்க வேண்டும்..

அதற்கான முயற்சியில் உவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.