31/07/2018

நடிகை ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் சவால்.. பொது இடத்தில் சந்திப்போம்.. முடிந்தால் அதனை காட்டு...


நடிகை ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். தமிழில் ராகவா லாரன்ஸ், முருகதாஸ், ஸ்ரீகாந்த் என பிரபலங்கள் பெயர் அடிபட்டது.

இப்போது முதன்முதலாக ஸ்ரீரெட்டி புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதில் அவர், ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து மீடியா நண்பர்கள் நிறைய பேர் போன் செய்து கேட்கிறார்கள், அதற்காகவே இந்த அறிக்கை. எனது ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் என்றும் ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். மேலும் எனது ஓட்டல் அறையில், சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு நான் என்ன முட்டாளா?

நான் ஸ்ரீ ரெட்டிக்கு நேரடியாகவே சொல்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். கடவுளுக்கு தெரியும். இத்தனைக்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை.

ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை நான் பார்த்தேன். அவரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். உண்மையில் அவருடைய பிரச்சினை தான் என்ன? நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி எல்லோரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்பது தானே.

தான் ஒரு நல்ல நடிகை என ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். நாம் ஒன்று செய்வோம். நாம் இருவரும் சேர்ந்து ஊடகத்தினரை சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு சீனும், சில டான்ஸ் ஸ்டெப்புகளும் தருகிறேன். நான் ஆடும் அளவுக்கு கடினமான ஸ்டெப்புகளை தரமாட்டேன்.

அந்த சீனுக்கு தகுந்த மாதிரி ஸ்ரீ ரெட்டி நடித்தும், ஆடியும் காட்டட்டும். உண்மையிலேயே அது நன்றாக இருந்தால், அந்த இடத்திலேயே வைத்து எனது அடுத்த படத்துக்கான அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன் என்று ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.