20/08/2018

திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...


திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வின் கருத்தியலையும் தலையில் ஏற்றிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுகிற தமிழர்கள்..

தொன்மையான மொழி தமிழ்மொழி, தொன்மையான மாந்தன் தமிழ் மாந்தன்.

தொன்மையான கண்டம் குமரிக்கண்டம் எனப் புலப்படுத்திய பாவாணரின் உன்னதக் கோட்பாடு இருக்கும்போதே தமிழர்க்குத் தன்மானத்தையும் அறிவையும் ஊட்டியவர் ஈ.வெ.ரா.வே எனக் கதை அளக்கிறார்கள்.

தொன்மையான மொழியையும் இன அடையாளங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கொண்ட தமிழன்..

ஈ.வெ.ரா. வால்தான் தன்மானத்தையும் அறிவையும் பெற்றான் எனக் கூறுவது பேரிழிவில்லையா?

37ஆம் அகவையில் தன் மனைவியை இழந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள்..

ஒரு பெண் தெய்வத்தைத் தொட்ட கைகளால் மற்றொரு பெண் தெய்வத்தைத் தொட மாட்டேன் என்று மறுமணத்தை மறுத்தவர்.

அம் மாமனிதரைத் தன்மானமும் அறிவும் உள்ளவர் என்பதா?

அல்லது தனது 72ஆம் அகவையில தான் வளர்த்த 26 அகவை இளம் பெண்ணை மறுமணம் புரிந்து கொண்டு அதற்குக் காரணங்களைக் கற்பித்த ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

உழவன் ஒருவன் பயிரின் மேலுள்ள நச்சுப் புச்சிகளுக்கு மருந்து அடிப்பதற்கு மாறாக மண்புழுவிற்கு மருந்து அடித்து மண்ணையே மலடு ஆக்குவதுபோல், ’பகுத்தறிவு’ என்ற பெயரில் தமிழரின் பண்புகளையும் மாண்புகளையும் இழித்தும் பழித்தும் பேசியதுடன்..

தமிழினத்தைத் தாழ்த்தி மலடாக்கிய பின்னர்த் தமிழர்க்குத் தலைமைதாங்க தமிழருள் தகுதியுள்ளவர்கள் எவரும் இல்லை என்று உளறியவாறு ’தமிழர்களுக்குத் தலைவர்’ தாமே எனத் தம்பட்டம் அடித்துக்கொண்ட ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

இமயமலைக்கும் விந்தியமலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரியவர்த்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்க்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா.

தமிழர்களைப் பிராமணர்கள் ’சூத்திரன்’ என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. தமிழர்களை ’சூத்திரர்’ ’சூத்திரர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியதுடன், தமிழ் இலக்கியங்களையும் கூடக் கொச்சைப்படுத்தினார்.

தமிழ்மொழியையும் தமிழ்த் தேசிய இனத்தையும், மொழிவழித் தேசியத்தையும் சிதைத்துச் சீரழித்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றும் முழுதாக மறுக்கும் துணிவில்லாத தமிழ்த் தேசியர்களால் தமிழ்த் தேசியத்தை ஒருக்காலமும் படைக்கவியலாது.

ஈ.வெ.ரா.வின் முழுமுதல் நோக்கமே தமிழ் மொழியை இழிவுபடுத்தித் தமிழ் இனத்தைத் ’திராவிட’ இனமாக்கித் தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோகக் காரணமாயிருந்து..

தமிழர் மீது தெலுங்கர்கள் கொண்ட ஆளுமையை நிலை நாட்டுவதேயாகும்.

ஆகையால் தமிழர்களே.. 75 ஆண்டுக்காலம் தமிழினத்தைத் திராவிட இனமாகத் திரித்துரைத்துத் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் பழித்துப் பேசியதுடன்..

தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோன போது பச்சையாக காட்டிக்கொடுத்துத் தமிழ்நாட்டிற்கு இரண்டகம் செய்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றாகப் புறந்தாள்ளுவோம்..

திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.