20/08/2018

மலையாளத் துரோகம் ஓயாதா...


தேனியிலிருந்து ச அன்வர் மற்றும் எஸ் ஆர் சக்கரவர்த்தி...

பொறுமையாகத்தான் இருக்கிறோம்... எதுவும் பேசிவிடக் கூடாது. அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிர்ச்சேதமும்... பொருட்சேதமும் அதிக அளவில் இருக்கிறது. மழையும் நின்றபாடில்லை என்பதால் அளவுகடந்த பொறுமையோடு அமைதி காக்கிறோம்.

ஆலுவாவையும்... எர்ணாகுளத்தையும் தண்ணீர் சூழ முல்லைப்பெரியாறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரே காரணம் என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மலையாள இனவெறிக் கும்பல்களை கிழித்து தொங்கவிட வெகு நேரமாகாது.

Malayalavarthaikal என்கிற மலையாள செய்திச்சேனலில் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை உடையப்போகிறது என செய்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Shanisindia என்கிற சேனலிலோ... பிரபல முன்னறிவிப்பாளர் நாஸ்டர்டாமே 2020 ம் ஆண்டு ஜீலை 6,7,8 ஆகிய தேதிகளில் முல்லைப்பெரியாறு அணை உடையும் என்று சொல்லியிருக்கிறாராம்.

இன்னொரு பேப்பயலோ breaking mullaiperiyar in hd என்று அணை உடைந்து போகுமாறு கிராபிக்ஸ் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறான்.

பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் பிஜீமோளும்... தேவிகுளத்து ராஜேந்திரனும்... உடும்பஞ்சோலை எம் எம் மணியும் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ உடையப்போகிறது அணை... அதோ உடையப்போகிறது என்று இந்த அரைவேக்காடுகள் ஊளையிட ஆரம்பித்து 38 ஆண்டுகள் முடியப் போகிறது. ஆனால் ஒரு சிறு கீறல்கூட விழவில்லை.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இடுக்கியைச்சேர்ந்த ரசூல் என்கிற அறிவாளி நேராக உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 லிருந்து 139 ஆக குறைக்கவேண்டும் என்று மனுப்போட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த மனுமீது தீர்ப்பளித்த நீதியரசர் தீபக் மிஸ்ரா மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய குழுவின் வழிகாட்டுதல்படி...

நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தமிழக-கேரள அரசின் தலைமைச் செயலாளர்களுடன் முல்லைப் பெரியாறின் பேரிடர் மேலாண்மைக்குழு உடனடியாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. கண்டிப்பாக தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வர வாய்ப்புள்ளது.

மலையாளிகளின் வஞ்சகத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா என மனம் கொதிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை மறித்து இடுக்கி அணைக்கு  கொண்டு செல்வதற்காக இதே மலையாளிகள்.. 1971 லிருந்து 1984 வரை மூன்று அணைகளைக் கட்டியதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

கட்ச் அணை

சபரிகிரி அணை

ப்ளீச்சிங் அணை

என்கிற மூன்று அணைகளும் முல்லைப்பெரியாறை மறித்து கட்டிய அணைகளாகும்.

மேற்கண்ட இந்த மூன்று அணைகளும் கடந்த ஜீலை இறுதியிலேயே நிரம்பிவிட்டது.

ஆனால் முல்லைப்பெரியாறு 142 அடியை எட்டியது ஆகஸ்ட் 15 ம் தேதிதான்.

ஜீலையிலேயே மேற்கண்ட மூன்று அணைகளிலிருந்தும் உபரி நீரை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.அதனால்தான் முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்காமலேயே இடுக்கி அணை தன் முழுக்கொள்ளளவை எட்டியது.

ஆகஸ்ட் 15 ல் தான் பெரியாறு அணை திறக்கப்பட்டது. ஆனால் ஆலுவாவையும்... எர்ணாகுளத்தையும்... நெடும்பாசேரி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது ஆகஸ்ட் 6.மறக்க வேண்டாம்.

மேற்கண்ட மூன்று அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியாறு இரும்புபாலத்தின் கீழே கரைபுரண்டு ஜீலை இருபதாம் தேதிமுதல் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது பிஜீமோள் கண்களுக்கு தெரியவில்லையா.

இதற்கெல்லாம் மேலாக ஆனையிறங்கல் அணை நீர்... குளமாவு அணை நீர்... செருதோணி அணை நீர்... கல்லாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர்... பாம்பனாறு சுரங்கம் வழியாக செல்லும் நீர்... மாட்டுப்பெட்டி... குண்டல அணைகளிலிருந்து வெளியேறும் நீர் என கிட்டத்தட்ட எண்பதாயிரம் கனஅடி தண்ணீர் இடுக்கியை முற்றுகையிட்டதாலேயே இடுக்கி அணை நிரம்பியது.

மிகத்தந்திரமாக மலையாள அரசியல்வாதிகள் செய்த இந்த செயல்களே இன்றைக்கு அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

வாசுதேவநல்லூர் அருகே இருந்த செண்பகவல்லி அம்மன் கோவில் அணைக்கட்டை உடைத்து அதையும் இடுக்கி அணைக்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள்தான் இன்றைக்கு யோக்கியர்கள் போல வேசமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் பினராயி விஜயனின் நடிப்போ திலகனின் நடிப்பைத்தாண்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரால் நாற்பது லட்சம் மக்கள் மாண்டுபோவார்கள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு களரி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அட முட்டாள்களே...

முல்லைப்பெரியாறு நீர் பள்ளத்ணாக்கில் பாயும் ஒரு ஆறு என்பது ஏன் உங்கள் மண்டைகளுக்கு உறைப்பதில்லை.

பெரியாற்றில் திறந்துவிடப்படும் நீர் புல்மேடு... வல்லக்கடவு... வண்டிப் பெரியாறு.... உப்புத்துறை... தேங்காய்க்கல்... பசுமலை... நேரிகுளம்... உப்புத்துறை வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.

வழிநெடுகிலும் பெரியாற்று நீரால் எவருக்கும் துளி அளவு பாதிப்பில்லை என்று தெரிந்தும் மலையாள வெறியர்கள் முல்லைப்பெரியாறை குறிவைக்க காரணம் இடுக்கி அணையின் மூலம் வரும் 780 மெகாவாட் மின்சாரமே.

ஆகவே மலையாள வெறியர்களே முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் முன்பு கேரள அரசு சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்ச் அணை சபரிகிரி அணை மற்றும் பிளீச்சிங் அணைகளை இடித்து தரைமட்டமாக்குங்கள்.

ஆலுவாவும் எர்ணாகுளமும் தண்ணீரில் மூழ்கக்காரணம் இந்த மூன்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்தான்.

அதிலும் இந்த ஏசியாநெட் சேனல்கார பொறுக்கிகளின் அடாவடியும்... மலையாள மனோரமா என்கிற மஞ்சள் பத்திரிக்கை நடத்துகின்ற மாமாக்கள் செய்கிற அட்டகாசமும் கொஞ்சநஞ்சமல்ல.

மழை வெள்ள சேதத்திற்கு நிவாரணம் தேடச்சொன்னால்  மானங்கெட்டவனுக முல்லைப்பெரியாறை உடைக்கணும்கிறான்.

இனி பொறுப்பதற்கில்லை.மலையாள துரோகங்களை இனி சகிக்கமுடியாது. யூடியூபில் முல்லைப்பெரியாறு அணையைப்பற்றி தவறாக பிரச்சாரம் செய்தால் முதலில் செருப்பால் அடிப்போம்... பின்னர் உச்சநீதிமன்றம் செல்வோம்.

பிகு-இதைப்படிச்சிட்டு ஐயய்யோ கேரளா முங்குதேனு எவனாவது முனங்கினா ஆழ்ந்த அனுதாபங்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.