31/08/2018

வேற்றுகிரக வாசிகளும் உண்மைகளும்...


இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த ‘ஹூவ்லெட் பக்கார்ட்’ (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி, அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.

மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோது, இப்படிப்பட்ட மண்டை ஓடுகள் மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்றும் அவைகள் பூமி எங்கும் பரவியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகளின் மர்மம் தான் என்ன?

நமது சூரியக்குடும்பத்தின் 5ஆ-வது கோளான வியாழன் பூமியைவிட 120 மடங்கு மிகப்பெரிய கோளாகும். இதன் தரைத் தளம் பற்றி இன்றுவரை நமது அறிவியலாளர்களுக்குத் தெரியவில்லை. இதற்குத் தடையாக இருப்பது இதன் வளிமண்டலம்.

இதன் வளிமண்டலம் சுமார் 600 கி.மீட்டர் உயரம் வரை பல்வேறு அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அடுக்குகள் கொண்ட வளிமண்டலத்தின் மேற்புறம் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களாலும், அதன் கீழே நீராவி, கந்தகம், மற்றும் அமோனியா போன்றவைகளாலும், அதனைத் தொடர்ந்து மீத்தேன், ஹைட்ரஜனேற்றம் கொண்ட சயனைடுகளாலும் உள்ளது.

மேலும் அமோனியா, ஹைட்ரஜன், கந்தகம் கொண்ட கலவைகளால் ஆன கண்ணாடி போன்ற குவார்ட்ஸ் (Quartz) கிரிஸ்டல் துகள்களால் ஆன உயிரினங்கள் உருவாகியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

சமீபத்திய தகவலின்படி வியாழன் கோளின் தரைப்பகுதியில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகம் மற்றும் கார்பன் அடங்கிய மிதமான தட்பவெப்பம் நிலவுவது தெரியவந்தது. இதை வைத்து வியாழனில் உயிர்கள் வாழும் வாய்ப்பு 50 விழுக்காடு இருக்கலாம் என தெரியவருகிறது. எனவே அவை கிரிஸ்டல் உயிர்கள்தானா? என்பது புதிராக உள்ளது.

மனிதன் மற்றும் தாவரங்களைப் போன்ற உயிரினம் நமது பூமியில் மட்டுமே தரைத் தளத்தில் வாழ்கிறது. ஆனால், வியாழனின் வளிமண்டல அடுக்கில் இருந்தே உயிர்கள் வாழும் சூழல் நிலவுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மோனியா, நீர், மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் கலந்த (கிரிஸ்டல்) மேகங்களின் இடையிடையே ஆன உரசல்களால் பல கோடி ஆண்டுகளாக தொடர்ந்து மின்னல் வெட்டிக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக இந்த மினத கிரிஸ்டல் உயிரினங்கள் உருவாகியிருக்கலாம்.

இவர்கள் நம்மை போன்று பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருக்கலாம்,அவ்வாறு பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அவர்கள் நம்மை போன்று தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை….

மனித கிரிஸ்டல் உயிர்கள் என குறிப்பிட காரணம். மேலே குறிபிட்ட இரசாயன மூலக்கூறுகள் மனித உயிர்களிடம் காணப்படுகிறது.

எனவே தான் நமது உறவினர்களைப் போலவே மண்டையோடு இருக்கிறது, ஆனால் மனிதர்களைப் பற்றிய பரிணாம வளர்ச்சியில், நம்மைக் கவனித்துக் கொண்டே பல வேற்றுகிரக இனங்கள் நம்மிடையே உள்ளன.

மனிதனும் அனைத்தையும் அதாவது பூமியில் உள்ள அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக எண்ணி ஏமாற்றம் கொண்டிருக்கிறான்…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.