30/08/2018

கேரளாவில் வெள்ளத்தால் நின்று போன திருமணம்.. இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்...


கேரளாவின் மூணாறில் உள்ள சுப்பிரணியசாமி கோயில் அருகே விஜயன் மற்றும் முனியம்மா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சரண்யாவிற்கு செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அவர்களது வீடு மற்றும் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதில் சரண்யாவின் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகளும் அடக்கம்.

இதனால் சரண்யாவின் திருமணம் நின்று போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட மூணாறில் டீக்கடை வைத்திருக்கும் மரியான் என்பவர் திருமணத்திற்காக ரூ 10 ஆயிரம் நிதி அளித்தார். இதனை தொடர்ந்து மேலும் பலர் உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.

இதனால் மகளின் திருமணத்தை குறிப்பிட்ட தேதியில் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர் சரண்யாவின் பெற்றோர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.