01/09/2018

1960களில் ஜப்பான் அரசு கப்பல் ஒன்று திமிங்கலங்களை ஆராய ஆர்க்டிக் கடலுக்கு சென்றது...


அப்போது அக்குழுவினர் ஒரு விசித்திர உயிரினத்தைக் கண்டனர்.

அது மனிதனைப் போன்ற தலையையும், ஐந்து விரல்களைக் கொண்ட கைகளையும், மீன் போன்ற வால் பகுதியையும், வெள்ளைத் தோலையும் கொண்டிருந்ததாக கூறினர் அக்கப்பல் குழுவினர்.

அதனை நிஞ்சன் என அழைக்கத் துவங்கினர் ஜப்பானியர்.

நிஞ்சன் என்றால் ஜப்பானிய மொழியில் மனிதன் எனப் பொருள்.

மேலும் பல கடல் பயணிகளும் அடிக்கடி அந்த உயிரினத்தை பார்த்ததாக கூறியுள்ளனர்.

அது 20 முதல் 30 அடி நீளம் இருந்ததாகவும், இரவில் மட்டுமே அவை தென்படுவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த உயிரினம் கூகுள் எர்த் புகைப்படத்திலும் சிக்கியுள்ளது.

ஆனால் இன்னும் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

ஜப்பான் அரசுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியும் என்றும், இதனைப் பார்த்தவர்களை அதனைப் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என ஜப்பான் அரசு அடக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இக்கடல்பகுதியில் அடிக்கடி பறக்கும் தட்டுகள் தென்படுவதால், இது வேற்றுகிரக உயிரினமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இதை மையப்படுத்தி சில தொலைக்காட்சி தொடர்களும், படங்களும் ஜப்பானில் வெளிவந்துள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.