01/09/2018

சுங்கச்சாவடி என்பவை ஒரு நவீன வழிப்பறிக் கொள்ளை...


சாலை போடுவது என்பது ஒரு அரசாங்கத்தின் அடிப்படைக்  கடமைகளில் ஒன்று.

சாலை போக்குவரத்தின் மூலமான வியாபார வளர்ச்சி, உற்பத்தி பெருக்கம்... ஆகியவை தேச வளர்ச்சியின் அடிதளமாகவும் உள்ளது. மேலும் சாலை வரியையும் தனியாக  நாம் செலுத்துகிறோம்..

தார்மீக ரீதியாகவும் சரி, சட்டப் பூர்வமாகவும் சரி, வாகன வசூல் என்பது ஒரு போதும் ஏற்புடையது அல்ல..

அறச் சிந்தனை அறவே அற்ற அரசும், கெடு மதி கொண்ட தனியார்களும் இணைந்து நடத்தும் பட்டவர்த்தனமான சூது.

இந்த லட்சணத்தில் சுங்கச் சாவடிகளில் நீதிபதிகளுக்கு தனி வழித்தடம் வேண்டுமாம்.  நீதிபதிகளுக்கும், முக்கிய வி வி ஐ பி களுக்கும் விஷேச சலுகைகள் செய்து தரப்பட வேண்டுமாம்.  அப்படி செய்து தராத பட்சத்தில் கடும் நடவடிக்கையாம்.

தட்டி கேட்க வேண்டியவர்களே இப்படி நடந்து கொள்வார்களேயானால்... என்ன செய்வது..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.