01/09/2018

முன்பு போல இப்போது வரும் ஊதுபத்தி் இயற்க்கையான முறையில் தயாரிப்பது இல்லை...


பெரும்பாலும் அனைத்து மதங்களின் வழிபாட்டிலும் பயன்படுத்தப் படும் பொருள் ஊதுபத்தி. இதன் மணம், புகையால் எவ்வளவு தீங்கு நேரும் தெரியுமா?

இந்தியர்களின் அனைத்து கோயில்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஊதுபத்தி. வீட்டிலும் பூஜையறையில் இந்த பொருள் இல்லாமல் இருக்காது நிச்சயம் இருக்கும். இது இல்லாமல் பூஜையறை நிறைவு பெறாது.

நறுமணம் மட்டும் தராமல் நல்ல சிந்தனைகளையும், தெளிவான புத்துணர்ச்சியையும் அளிக்கிறது என்று சமிபத்திய விளம்பரங்கள் மூலம் நம்பவைக்ப்படுகிறது.

ஆம், ஊதுபத்தியின் புகையால் சிலர் சுவாசிக்க சிரமப்படுவர், மூச்சுவிட முடியாது, இருமல் வரும். இந்த புகை சில சமயம் சிகரட் புகைக்கு இணையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் நுரையீரலை பாதிப்படைய வைக்கும் என்பது போல ஊதுபத்தியின் புகையும் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நுரையீரல் புற்றுநோய் வரக்கூட வாய்ப்புள்ளது. ஊதுபத்தியின் புகை நேரடியாக நுரையீரலுக்கு சென்றடைகிறது. அதித ஊதுபத்தி புகையை சுவாசித்தால் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில நண்பர்கள் கேட்டார்கள் நான் மது அருந்தவதில்லை புகைபிடிப்பதில்லை வேறு எந்த கெட்டபழக்கங்களும் இல்லையே எனக்கு எப்படி புற்றுநோய் வந்தது அதற்க்கு இதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் அதிகம் ஊதுபத்தி உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முடிந்தவரை ஊதுபத்தி உபயோகிக்காமல் இருக்கலாம். இந்த புகையை குழந்தை வயிற்றில் இருக்கும்போது சுவாசிப்பதால் பிறக்கும் குழந்தைக்கு லுக்கேமியா (ஒரு வகையான புற்றுநோய்) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

வீட்டிற்குள் ஊதுபத்தி உபயோகிப்பதால் அந்த மணம், புகை குறைந்தது 2 மணி நேரத்திற்கு மேலாவது வீட்டிற்குள் இருக்கும். இதனால் வீட்டிற்குள் அதிகம் கார்பன் மோனாக்சைடை சுவாசிக்க செய்கிறது. இதனால் நரம்பு மண்டலத்தை மட்டும் பாதிக்காமல் ஞாபக சக்தியை குறைக்க செய்யும், கவனசிதறலையும் உண்டாக்கும் என்கிறார்கள்.

இனிமேலாவது ஊதுபத்தி பயன்பாட்டை குறைத்து உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்காமல் இருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.