12/09/2018

மனிதன் சந்தோஷத்தை தொலைத்த காரணம்...


மனித வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனதற்கு மிகப்பெரிய காரணம் இந்த தத்துவமே...

காலம் பொன் போன்றது..

நேரம் காலம் உணரா வாழ்க்கையே நிம்மதியை தரக்கூடிய வாழ்க்கை..

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது..

உயிர்களுக்கான லட்சியமே உயிர்வாழ்வதே (Survival of the fittest).

உயிர் வாழ இயற்கையும் அது தரும் உணவுமே போதுமானது.

அப்போ வாழ்க்கையை மற்ற விசயங்களில் கவனம் செலுத்தாம நேரடியா உயிர் வாழ என்ன தேவையோ அதை உருவாக்கு (விவசாயம்).

அதே வேலையில் கொடுக்கப்பட்ட கருவியையும் காப்பாற்று (இயற்கை) மிதம் உள்ள அனைத்தும் போலியான கட்டமைப்பு தான்.

யாரோ ஒருவனுக்கான கட்டமைப்பு தான்..

உன்ன ஒருவனுக்காக வேல செய்ய வைக்குறான் அதுக்கு பணம்னு கட்டமைப்பு ரெடி பண்ணான் அதுக்குள்ள உன்ன வேகமாக ஈர்க்க நேரம் என்ற கருவிய பயன் படுத்துறான்..

ஏன் குழந்தை பருவங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷத்தை தந்த நாட்களாக இருக்கு யோசியுங்க ?

இரண்டே பெரும் காரணங்கள்...

1) வயதை உணரா மூளை..
2) நேரத்தை கணக்கில் எடுக்காத வாழ்க்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.