19/10/2018

மனைவியை நடுரோட்டில் வெட்டி கொன்ற கணவன்.. சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்...


மதுரை மேலூர் அருகே உள்ள அழகிரிபட்டியை சேர்ந்தவர் பிரபு (32). இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

டெல்லி உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரபு, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து தனியாக ஓட்டல் ஆரம்பித்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ராதிகா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

பல முறை மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து குடும்பம் நடத்த முயற்சி செய்தார். ஆனால் ராதிகா அதற்கு ஒப்பு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு நேற்று பணி முடிந்து பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது  பட்டப்பகலில் அரிவாளால் வெட்டினார். இதில் ராதிகா சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.