08/10/2018

தமிழினத்தை அழிக்க உதவிய பாஜக வாஜ்பாய் & வைகோ நாயூடு...


வாஜ்பாய் சிங்களவருக்கு காலத்தால் செய்த பேருதவி...

2000 ஆம் ஆண்டு, புலிகள் 40,000 சிங்கள ராணுவத்தினரை முற்றுகை போட்டிருந்த சமயம்.

யாழ்ப்பாணம் புலிகள் கைக்கு எட்டும் தூரம்.

அலறியடித்துக் கொண்டு வாஜ்பாயிடம் ஓடிய இலங்கை அமைச்சர் லக்‌ஷ்மண் கதிர்காமர் கெஞ்சிக் கேட்க..

உடனடியாக ஹிந்திய விமானப்படைத் தலைவர் டிப்னிசை இலங்கைக்கு அனுப்பினார் வாஜ்பாய்.

அது மட்டுமில்லை முதன்முதலாக இலங்கைக்கு நிதியுதவி செய்த பிரதமரும் அவரே..

அது அப்போது இலங்கைக்கு காலத்தால் செய்த பேருதவியாகும்.

எவ்வளவு தெரியுமா 100 மில்லியன் டாலர்.

இதுவே இன்றுவரை இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த மிகப்பெரிய நிதியுதவி ஆகும்.

(இந்திய ராணுவத்தை அனுப்பியிருப்பார், ஆனால் அமைதிப்படை புலிகளிடம் வாங்கிய அடி கண்முன்னே வந்து போனதால் பணமாக கொடுத்துவிட்டார்)

புலிகளும் சூழல் அறிந்து மேற்கொண்டு முன்னேறாமல் விட்டுவிட்டனர்.

வாஜ்பாய் அரசு ஜஸ்வந்த் சிங் மூலம் இலங்கையைத் தூண்டாடுவதை இந்தியா அனுமதிக்காது" என்று அறிவிக்கிறது.

15.06.2000 அன்று சென்னை வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை உறுதிசெய்கிறார்.

அடுத்த இரண்டு மாதங்களில் 90 கோடி மதிப்புள்ள INS சரயு என்ற போர்க் கப்பலை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறது.

மூன்று செடக் ஹெலிகாப்டர்களையும் வழங்குகிறது.

இலங்கைக்கு கணக்கே பார்க்காமல் கடனுக்கு இராணுவ தளவாடங்கள் வழங்கும் ஒப்பந்தம் போடப்படுகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் 200 சிங்கள ராணுவத்தினரை அழைத்து வந்து சிறப்பு பயிற்சியும் அளிக்கிறது வாஜ்பாய் அரசு.

இது அத்தனைக்கும் பாஜக கூட்டணியில் இருந்த வைகோ உடந்தை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.