06/11/2018

1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசு, அறிவிப்பு செய்த பார் உரிமையாளர் கைது...


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது.  தகவல் அறிந்த போலீஸார், பார் உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான முகமது அலி ஜின்னா உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மதுகடை பார் மேலாளர் வின்செண்ட் ராஜ்,  உதவியாளர் ரியாஸ் அகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.