06/11/2018

உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி...


இந்த மணி வில்லியம்ஸ் என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக் கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்தி வந்தனர்.

அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதில் முகையிதீன் பக்குசு கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

மணி குறைந்தது 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் ஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள டே பாபா தேசிய கண்காட்சியகத்தில் [ TE PAPA museum of newzland-ல் ] பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

குறிப்பு : நியூசிலாந்து அருங்காட்சியத்திற்கு ஒரு வேண்டுகோள்.. இந்த மணியை இந்திய கேட்டால் கொடுக்காதீங்க.. வாங்கி கொண்டு வந்து ஒன்னு தொலைச்சிடுவானுங்க இல்ல ஒடச்சி அழிச்சிடுவானுங்க... தமிழனோட உடமை என்று தெரிந்தால்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.