10/11/2018

திருட்டு திராவிடம் செய்தது...


விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி பெருமுதலாளிகளின் தொழில் சாலைக்கு கொடுத்தது.

விவசாயிகளின் பொருள்களை நேரடியாக விற்க இயலாமல், இடைத்தரகர் மூலம் லாபத்தை கொள்ளையடிக்க வைத்தது.

உரம், டிராக்டர் என கம்பெனிகள் ஓங்க  விவசாயிகள் நலிந்தது.

கல்வி தனியாரில் சிறப்பாக கிடைக்கும் என,  கல்வி மூலம் காசை சுரண்டியது.

டாஸ்மாக் சாராயம் மூலம் வருடாவருடம்  உழைக்கும் மக்களிடம் இருந்து முப்பதாயிரம் கோடி சுரண்டியது.

குடிகாரனாக்கி குடும்பத்தை கெடுத்தது. உயிரை குடித்தது.

மக்களை சிதைந்த நிலைக்கு தள்ளி அதற்கு மேல் சிந்திக்காதவனாக்கி இலவச பொருட்கள் மூலம் அதுவே பெரிது என உளவியலாக தாழ்த்தியது.

இந்திய அரசுக்கு பொம்மையாகி தமிழக உரிமைகளை டில்லிக்கு கைமாற்றியது.

இத்தனையும் செய்த திராவிட கட்சிகளுக்கு இலவசத்தால் மக்களை வாழ வைத்தோம் என சொல்ல தகுதி உண்டா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.