05/12/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


கிரேக்க கணிதவியலாளரும் தத்துவவாதியுமான "ஆர்க்கிய்தாஸ்" கி.மு.405ல் தெற்கு இத்தாலியில்  நீராவி மூலம் இயங்கும் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அதன் வடிவம் மற்றும் பண்புகளின் காரணமாக சாதனம் பறக்கும் புறாவாக அறியப்பட்டது. 'நீராவில் இயங்கும் பறக்கும் புறா, அவரது காலத்தில் மிகவும் மேம்பட்ட கண்டுபிடிப்பாக இருந்தது. ஒரு காற்றியக்கவியல் கண்ணோட்டத்தில் பறக்கும் புறா இன்றைய நவீன விமானங்களுடன் ஒத்திருந்தது.

மரத்தில் செய்யப்பட்ட வெற்று உருளை வடிவ இலகுரக உடலில்  சிறியதாக பறக்கும் புறாவை வடிவமைத்தார். இரு பக்கங்களிலும், மற்றும் அதன் பின்புறம் ஒரு சிறிய இறக்கைகளையும் அது கொண்டிருந்தது. பொருளின் முன் ஒரு பறவையின் முதுகைப் போல் கட்டப்பட்டது. அதிகபட்ச பறக்கும் தூரத்திற்கும் வேகத்திற்கும் இந்த அமைப்பு மற்றும் வடிவம் மிகவும் நேர்த்தியான ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்டது ஆகும்.

பறக்கும் புறாவின் பின்புறம் திறந்த வெளியாக இருந்தது, அதில் ஒரு பெரிய மிருகத்தின் சிறுநீர்ப்பையால் செய்யப்பட்ட பலூன் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அது ஒரு திறப்புகளைக் கொண்டு சூடான, காற்றுப்புயல் கொதிகலனுக்கு செல்லுமாறு இணைக்கப்பட்டுள்ளது. கொதிகலானது மேலும் மேலும் நீராவி உருவாக்கியபோது, ​​நீராவின் அழுத்தம் காரணமாக இறுதியில் இயந்திர எதிர்ப்பை மீறியது, வானில் பறக்க தொடங்கியது.

பறக்கும் புறாவை ஆர்க்கிய்தாஸ், ஏரோடைனமிக்ஸ் மற்றும் உந்துசக்தியில் இயக்கும் முறையை பற்றிய அறிவைப் பெற்றிருப்பது முன்கூட்டியே பெற்றிருப்பது ஆச்சரியம் தான்.

ஒரு கட்டத்தில் அந்த விமானம் 200 மீட்டர் (656.1 அடி) உயரம் பறக்க முடிந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு (1903) ரைட் சகோதரர்களின் முதல் விமானம் 37 மீட்டர் தூரத்தில் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொண்டால், அது மிகவும் அசாதாரணம் மற்றும் ஆச்சரியம் என்பது விளங்கும்.

இது ஆதிகாலத்தில் அறியப்பட்ட முதல் ரோபோவாகும்.
அதுமட்டுமல்ல, பறவைகள் எவ்வாறு பறக்கிறது என்பதை ஆராயும் விஞ்ஞானியின் முதல் ஆய்வுகளில் ஒன்றாகும் இது..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.