07/03/2019

வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வெளியே வேறு கிரகங்களில் உயிர் வாழ்கிறார்களா? என்பதை அறிய அமெரிக்கா உட்பட பல வல்லாதிக்க நாடுகள் தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றன...


இதற்கு உதாரணமாக
இப்போதைக்கு எந்த ஆய்வுக்கும் கொட்டப்படாத பணத்தினை வேற்றுக்கிரக தேடலுக்காக இந்த நாடுகள் தங்கள் விஞ்ஞானிகளுக்கு முன்வைத்து வருகின்றனர். இல்லாத ஒன்றை இத்தனை சிரமப்பட்டு பணத்தினை வாரி இறைக்கும் அளவிற்கு, இவர்கள் ஒன்றும் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் அல்ல.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்றுகிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு சமூகமாக உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் உணவு உண்டு, தண்ணீர் அருந்தி நம்மை போலவே இருப்பார்களா? என்பது தான் சந்தேகம் என்கிறார்.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமமல்ல. அவர்களது இடத்தில் இருந்து இந்நேரம் பயணிக்க தொடங்கி இருந்தால், 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம் என்று கூறி உள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியிருந்தார். இந்த திட்டத்துக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து அடுத்த 10
ஆண்டுகளுக்கு ரூ .640 கோடி
செலவிடப்படும் .

மேலும் ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார் . இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த
வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட்
பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ் தலைமை தாங்குகிறார் .

இந்த திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும் , மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர் ( 328 அடி ) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பால் ஹெல்யர் வேற்றுகிரகவாசிகள் குறித்து புதுவித தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதைப்பற்றி தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்.

அவர் கூறியதாவது...

இதுவரை 4 வகையான
வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக்கொண்டிருக்கிறார்க
கடந்த சில ஆண்டுகளாக
வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது . பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசகிள் மனிதர்களின் கண்டுபிடிப்பான அணு ஆயுதத்தை பார்த்து வருத்தம் கொள்கிறார்கள் ,
ஏனெனில் அணுகுண்டானது
அண்டசராசரத்தில் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகிறார்கள்.

மேலும் , பூமியை பசுமையாக்கும் பல்வேறு யோசனைகள் அவர்கள் வசம் உள்ளன , வேற்றுகிரகவாசிகளால் பருவ
மாற்றங்களுக்கு தீர்வு காண முடியும்.சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல ஆடையணிந்து ஷாப்பிங்
சென்றுள்ளனர் . அவர்களை நான் பார்த்துள்ளேன் , ஆனால் அதற்கானஆதாரம் என்னிடம் இல்லை . அவர்களை பார்த்த நான் மட்டுமே இதற்கு ஆதாரம் என கூறியுள்ளார்.

சர்வதேச விண்வெளி மையம் நாசாவின் முன்னாள் கமாண்டர் டாக்டர் லெரொய் சியோ ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள வொல்லோங் கோங் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார் அங்கு மாணவர்களியே பேசிய அவர் கூறியதாவ்து:-

சமீபத்தில் சனிகிரகத்தின் நிலவில் நீர் உள்ளது கண்டறியபட்டு உள்ளது . மேலும் வளிமண்டலங்களில் அமினோ அமிலங்கள் உள்ளது. பிரபஞ்சத்தில் நம்மை தவிர வேறு
வேற்றுகிரகவாசிகளும் உள்ளனர் என்ற கருத்தை இது காட்டுகிறது. எல்லா வகையான உயிரினங்களும்,
புத்திசாலித்தனமான
வேற்றுகிரகவாசிகளும் உள்ளன என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருவருக்கொருவர் கண்டுபிடிக்க முடியாதது பரந்த தூரத்தில் உள்ளதாக நான் நினைக்கிறேன்.என கூறுகிறார்.

தாமஸ்_ஹேர்: அறிவியலாளர்.

ஸ்டீபன்_ஹாக்கிங்: கோட்பாட்டு இயற்பியலாளர்.

லெரொய்_சியோ: விண்வெளி ஆய்வாளர். 

பால்_ஹெல்யர்: ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

என உலகின் முக்கிய நபர்கள் இவ்வளவு தீர்மானமாக, அறிவியல் ரீதியாக வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனர் என்று கூறினால், நம்மால் நம்பமுடியாமல் இருக்க முடியுமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.