21/06/2020

நம்ம ஊர்களில்,,


50 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பிறக்க அறுவைச் சிகிச்சை கிடையாது...

வாழ்வதற்கு பணம் என்ற ஒரு பொருள் தேவைப்பட்டதில்லை...

நீரையும், நிலத்தையும், மரங்களையும், மலைகளையும், பிற உயிரினங்களையும் கடவுளாக கருதினர்...

பெரும்பாலானோர் சிறு தானியங்களை மட்டுமே சாப்பிட்டோம்...

அனைவரும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், பொறுமையுடனும் இருந்தனர்...

சிறு வியாதிகளுக்கு அனைவருக்கும் கை மருத்துவம் தெரிந்திருந்தது...

வரப்போகும் நோய்க்காக மருத்துவமனைக்கு என்று தனியாக யாரும் சேமித்து வைத்ததில்லை...

கூத்தாடிகளை கடவுளாகவும் கொண்டாடியது இல்லை...

பொழுதுபோக்கு என்ற ஒன்று இல்லாமல் அனைவரும் உழைத்தனர்...

இன்னும் பல இருக்கிறது, காசு , டெக்னாலஜி இவை மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்காது.. தற்போதுள்ள பலர் வாழ்க்கையில் இந்தநேரம் வரை ஒரேயொரு மரத்தை கூட நட்டு 10 அடி உயரம் கூட வளர்த்தில்லை...

இவை அனைத்திற்கும் அடிப்படை தேவையை தாண்டி வணிகம் வளர்ந்தது தான்.. அதனால் தான் வணிகத்தை (கார்ப்பரேட் வணிகத்தை) எதிர்க்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.