24/07/2020

கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ன கிழித்தார்?



ஆந்திரன், கன்னடன், மலையாளி பிரிந்த பின்னும், எஞ்சிய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க பார்ப்பானும், வட இந்தியனும் தடுக்கிறான். இதனை தமிழன் எப்படி சகிப்பான்.

அவன் சகித்தாலும் நான் எப்படி சகிப்பேன். தமிழ்நாடு பெயர் வைக்க முடியவில்லையென்றால், நானும் என் கழகமும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்?

இந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் வைக்க இந்திய அரசு மறுத்தபோது ராமசாமி ஆற்றிய உரை..

ஆனால் ஒரு தமிழன் களத்திலே இறங்கினான். அவன் சங்கரலிங்க நாடார்.

விருதுநகரில், 1956 ஜூலை 27..
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வை என சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினான்.

எத்தனையோ அறிஞர் சொல்லியும் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. எழுபத்தாறாம் நாள் உடல்நிலை மோசமாகி உயிரையும் இழந்தான்..

கேள்வி..

இனத்தின் மானம் பெரிது என சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்த சங்கரலிங்க நாடாரின் எழுபத்தாறு நாள் போராட்டத்தில்,

ராமசாமி அவனை சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தாரா?

தன் பத்திரிக்கையில் உண்ணாவிரதம் பற்றி தினமும் உணர்ச்சி பொங்க தலையங்கம் எழுதினாரா?

அல்லது இறுதிச்சடங்கில் தான் கலந்து கொண்டாரா?

தமிழ்நாடு என பெயர் வைக்க உயிரையே இழந்த சங்கரலிங்க நாடாரின் போராட்டத்தில்,...

தமிழ்நாடு பெயரிடாவிட்டால் உயிரோடு வாழ்ந்து என்ன பயன் என சொன்ன போலி புரட்சியாளர் ராமசாமி என்ன கிழித்தார்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.