18/08/2020

கேக்குறவன் கேனையனா இருந்தால் பிராமிணர்கள் எப்படியெல்லாம் கதை கட்டுறானுங்க பாருங்க? - வாஞ்சிநாதன் பற்றிய உண்மைகள்...



தி இந்து தமிழ் நாளிதழ் சுதந்திர தினத்தை முன்னிட்டு (15-08-2020) வாஞ்சிநாதன் பற்றிய பேட்டி ஒன்றை அவரது மகள்வழிப் பேரன் என்று சொல்லி ஜெயகிருஷ்ணன் என்பவரிடம் வாங்கி வெளியிட்டுள்ளது.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றபோது நிர்கதியாக நின்ற தனது பாட்டி (வாஞ்சிநாதன் மனைவி) ஒரு கர்ப்பிணி என்றும் அந்த நேரத்தில் முத்துராமலிங்க தேவர் தான் அவரை தன் கூண்டு வண்டியில் ஏற்றி சுற்றித்திரிந்து தலைமறைவாக வைத்து காப்பாற்றினார் என்றும் அந்த பேட்டியில் அவர் சொன்ன செய்தியை அப்படியே வெளியிட்டிருக்கிறது தி இந்து தமிழ் நாளிதழ்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையை கொன்ற நாள் 1911 ஜூன் 17. முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது 1908 அக்டோபர் 30. ஆக ஆஷ்துரை கொல்லப்பட்ட போது முத்துராமலிங்கத் தேவருக்கு 2 வயது 8 மாதம். இந்தக்குழந்தை தான் வாஞ்சிநாதன் மனைவியை மூன்று  மாதகாலம் தன் கூண்டு வண்டியில்  வைத்து சுற்றியதாக பொய்யாக புனையப்பட்டுள்ளது.

இது எவ்வளவு பெரிய பிராமிணச் சூழ்ச்சி பாருங்கள்.எவ்வளவு மோசமான வரலாற்று புரட்டு.அப்படி வரலாற்றை பொய்யாக மாற்றிப் பேசுகிறவனை தமிழர்கள் கண்டிருத்திருக்க வேண்டுமா இல்லையா? பசும்பொன் ஐயாவைக் கையில் எடுத்துக் கொண்டு தானே தமிழகத்தில் சங்கிகள் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள்.

எச்.ராஜா போன்றவர்கள் மதவெறி கொண்டு பேசுகிறார்கள்.

ஆகவே, பசும்பொன் பெருமகனார் பெயரை தவறாக பயன்படுத்திய வாஞ்சிநாதனின் மகள் வழிப்பேரன் ஜெய்கிருஷ்ணன் தமிழர்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.

அந்தக் கட்டுரையின் உண்மைத் தன்மையை அறியாமல் வெளியிட்ட இந்து தமிழ் நாளிதழும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல் நீதி மன்றத்தில் இரு தரப்பினர் மீதும் மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்படும்.

உண்மையில் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்றதே அவர் வர்னாஸ்ரமத்தை மீறுகிறார் என்கிற  சனாதன வெறியால் தான். அதற்கு வாஞ்சிநாதன் எழுதியக் கடிதமே சான்று.

வாஞ்சினாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொள்ளக் காரணங்கள்.

1. ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

2. அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மரபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ் துரை.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நடத்தவும் செய்தார். அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட சாதியினர்) சேர்த்துக்கொண்டு ஆஷ் துரை செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

3. பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர். அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.

வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே ...

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.

வாஞ்சிநாதன் சுதந்திரப் போராட்ட தியாகியெல்லாம் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.