03/08/2020

திராவிடம் னா என்னா அண்ணே..?



ONGC நிறுவனங்களிடம் கமிசன் பெற்றுக் கொண்டு மீத்தேன், ஸ்டெர்லைட், செல் எரிவாயு, நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, அனு உலை திட்டங்களை அனுமதிப்பது. போராடும் மக்களை காவல்துறை கொண்டு அடித்து நொறுக்குவது.

ஆட்சியில் இல்லாத போது அந்த திட்டங்களுக்கு எதிராக அறிக்கை மட்டும் வெளியிடுவது..

மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..

ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..

மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..

சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..

ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..

தமிழர் வழிபாடுகளை ஏளனம் செய்துவிட்டு சிரித்தபடி நோம்பு கஞ்சி குடிக்கிறது கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடுவது..

மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..

சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..

பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..

விஞ்ஞான ஊழல், 2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..

தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது...

இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.