21/08/2020

கொரானா என்பதே நுரையீரல் சார்ந்த நோய் எனவே நுரையீரலுக்கு சக்தி தரும் சுவை எது என்றால் அது காரமாகும்...



அதேநேரம் நுரையீரலை பலவீனப்படுத்தும் சுவை எது என்றால் அது இனிப்பாகவும் நமக்கு சளி பிடித்திருக்கும் போது சித்த மருத்துவர்கள் இதனால் தான் இனிப்பை தவிருங்கள் என்று கூறுவார்கள்...

எனவே இந்த காலகட்டத்தில் இனிப்பு வகைகளை சற்று குறைத்துக் கொண்டு  சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றில் செய்யப்படும் கசாயம் மிகச்சிறந்த பலனைத்தரும் உங்களுக்கு கொரனா வந்து இருக்கின்றதோ இல்லையோ இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி வெளியேறும் இதன் மூலம் நுரையீரல் பலம்பெறும் நுரையீரல் பலமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இதன் மூலம் நாம் கொரனா எனும் நோயை எதிர்க்கலாம் மேற்கண்ட கசாயம் எந்த பக்கவிளைவும் இல்லாதது எந்த நோயும் இல்லாதவர்களும் கூட இதை குடிக்கலாம் இது பசியை நன்றாகத் தூண்டும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்

 செய்முறை நமது பெரு விரல் அளவிற்கு 4 சுக்கு துண்டுகள் இரண்டு டீஸ்பூன் அளவு திப்பிலி ஒரு டீஸ்பூன் அளவு மிளகு இவைகளை நன்றாக மசித்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளுங்கள். இதை தேவையான அளவு எடுத்து தண்ணீர் கொதிக்கும்போது போட்டு கசாயம் தயார் செய்யுங்கள். இதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் நாட்டுச்சக்கரை இவைகளை கலந்து பருகுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.