01/09/2020

தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை சப்ளை செய்த தெலுங்கர் தெலுங்கர் வைகோ & கோ...



நான் பெறாத மகன் வைகோ -- வைகோவுக்கு வாஜ்பாய் புகழாரம்...

வைகோ பாஜக கூட்டணி வாஜ்பாயின் தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கிய பொது அந்த கூட்டணியில் அமுக்கமாக எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்த வைகோ இன்று ஐநா சென்று இருப்பது பாவங்களை தொடைக்கவா. இல்லை தமிழர்களை மீண்டும் ஏமாற்றி, இழந்த தன் அரசியல் செல்வாக்கை மீட்டு எடுக்கவா.

வைகோ கூட்டணி வாஜ்பாய் அரசு பல்வேறு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

INS SARAYU என்னும் கப்பலை வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்தது. இந்தக் கப்பலை பயன்படுத்தி 10/03/2003 விடுதலைப் புலிகளின் கப்பலை இலங்கை கடற்படை அழித்தது. அதற்குப் பிறகு விடுதலைப் புலிகளின் கப்பல்களில் 8 கப்பல்களை அழிப்பதற்கு இந்தக் கப்பல்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் (SURFACE TO AIR MISSILES) (IGLA LAUNCHERS) மொத்தம் 36 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன.

உலகிலேயே அதிக உயரத்திற்கு பறக்கும் தன்மை படைத்த CHEETAH ஹெலிகாப்டர்கள் 3 வாஜ்பாய் அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்டன .

போபர்ஸ் நிறுவனத்தின் விமான எதிர்ப்பு தானியங்கி துப்பாக்கிகள் (40 MM AUTOMATIC ANTI AIRCRAFT GUN) மொத்தம் 24 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன

கண்ணிவெடிகளில் இருந்து பாதுகாக்கும் வாகனங்கள் (MINE PROTECTED VEHICLES) 10 வாகனங்களை வாஜ்பாய் அரசாங்கம் கொடுத்தது.

இலங்கை ராணுவ திற்கு சிறப்பு பயிற்சி கொடுத்தது இந்திய அரசாங்கம்.

இது தவிர, வாஜ்பாய் அரசாங்கம் ராடார்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்தது.

இங்கே நான் அளித்திருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல சில மட்டுமே.

வைகோவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு 2008 இல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு கப்பல்களை இலங்கை அரசிற்கு கொடுக்கின்றது. VARAHA என்ற கப்பலையும் VIGRAHA என்ற கப்பலையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒருவருட கால லீஸ்க்கு கொடுக்கிறது, அது ஒவ்வொரு வருடம் நீடிக்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது[80]. அந்த கப்பல் சென்னையில் நிலைநிறுத்தபட்ட கப்பல். இதனை சென்னையில் வைத்து கொடுத்தால் இங்கே எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதற்காக அந்த கப்பலை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்று, அங்கே வைத்து கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுத்தார்கள்.

அந்த கப்பல் தான் விடுதலைபுலிகள் அமைப்பின் கடைசி இரண்டு கப்பல்களை அழிப்பதற்கு மிக பெரும் பங்காற்றியது. அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகள் அமைப்பின் ஆயுத கிடங்கு கப்பலை இலங்கை, ஈழ கடற்பரப்பில் இருந்து 1860 மைல்கள் தொலைவிற்கு விரட்டிச்சென்று அங்கு வைத்து அழித்தது.

எதிரியை விட துரோகி ஆபத்தானவன்..

சிந்தியுங்கள் தோழர்களே..

- தமிழர்.திரு.உமர்

நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?

– உமரின் ஆவணத்தில் உள்ள சில குறிப்புகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.