12/11/2020

வடுகயிஸ்டுகள் (அதாம்பா கம்யூனிஸ்டுகள்) ஆரம்ப காலம் தொட்டே தமிழருக்கு விரோதமாக நடந்து வருகின்றனர்...

 


இதுக்கு கம்யூனிஸ்டுகள் கட்சிகளில் வடுக ஆதிக்கம் அதிகமிருப்பதே காரணம்.

இதை தணிகை மீட்ட தளபதி விநாயகம் 1953லேயே சுட்டிக்காட்டினார். நாம் விழிப்புடன் இருக்காமல் விட்டதால் இன்று கம்யூனிசம் என்ற பெயரில் வடுகர்கள் ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.

கிருஷ்ணா ஆற்றின் கிளையாறான ஆரணி ஆற்றின் படுகைகள் தமிழகத்தில்  1953லேயே  அதிகமிருந்தன. அது தமிழகத்துக்கு கிடைக்க பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு நிலத்தைப் பிரித்திருதால் அந்த ஆற்றுப்பகுதிகள் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும்.

ஆனால் ஆந்திர கம்யூனிஸ்டுகளும் தமிழகக் கம்யூனிஸ்டுகளும் பிர்க்காவின் அடிப்படைப் படிப் பிரிக்காமல் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும் என அன்றைய இயல்புக்கு மீறி செயல்பட்டதாக சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் விநாயகம்.

ஆரணி ஆற்றுப் பாசன்த்தில் உள்ள பெரும்பகுதியான நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. இப்போது கிராமங்களைப் பிரித்த பிறகு ஆரணியாறு அணை இருக்கக் கூடிய இடம் ஆந்திராவிறகுப் போய் விட்டது.

இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 22 கிராமங்களில் உள்ள 13,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்டுகிறது.

நீர்ப்பாசன வசதிகளைஅப் பிரித்து வைக்கக்கூடாது என்பதை மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒப்புக் கொண்டு இருக்கின்றன.

ஆந்திராவில் உள்ள 13 கிராமங்களில் வசதிக்காக ஆரணி அணைப்பகுதி அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைப்பகுதியையும் 35 கிராமங்களையும் தமிழ்நாட்டுடன் தான் இணைத்து இருக்க வேண்டும்.

கிராமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால் தான் ஆரணி ஆற்றுப் பகுதி ஆந்திராவிற்குப் போய் விட்டது.

பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்திருதால் இந்தப் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும்.

சித்தூர், திருத்தணி, நகரி, சத்தியமேடு ஆகிய பிர்க்காக்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும்.

பிர்க்காவை அடிப்படையாக வைத்து பிரிவினை செய்யக்கூடாது என ஆந்திரக் கம்யூனிஸ்டுகளும், கிளர்ச்சி செய்தார்கள். அதை மத்திய காங்கிரசு ஆட்சி ஏற்ருக்கொண்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்ப்பட்டது.

—கே. விநாயகம், சட்டமன்றம் 10-3-53...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.